உன் மீது நான் கொண்ட காதல்
இலை மீது ஓடி விளையாடும் பனித்துளி போல...
ஆம், தொட்டும் தொடாமலும், விட்டும் செல்ல மனசில்லாமலும்..
ஆனால் உன் வார்த்தை சூரியனால்
முழுதும் குடித்து விட்டாய்...
எரியாத தீக்குச்சியாக பெட்டிக்குள் அடங்கி இருக்க விரும்பாமல்
என்னை உன்னுடன் உரசி விடு என்று வினவினேன்..
ஆனால் உரசாமலே எரித்து விட்டாய் உன் வார்த்தைகளால்..
பார்த்த சில நாட்களில் காதலை பரிமாறும் இவ்வுலகில்..
நீ மட்டும் தனித்து நின்றாய்.. எட்டா நிலவாய்..
மனதில் ஆம்ஸ்டார்ங்காய் எனை நினைத்து
தொட்டு விடலாம் என்று மேலேறி வந்தால்..
மாதத்தில் முப்பது நாளும் அமாவாசையாய் இருக்கிறாய்..
இருந்தும் காத்திருக்கிறேன் காதலி
நீ பெளர்ணமியாய் வருவாய் என்..
என் காதல் தடைகள் எல்லாம்
வேகத்தடைகள் போலத்தான்..
அது நான் செல்லும் வேகத்தை குறைக்கவே தவிர,
என் காதல் பயணத்தை அல்ல..
கண்டிப்பாக ஒரு நாள் உனை வந்தடைவேன்..
Bookmarks