Results 1 to 11 of 11

Thread: ஒரு மழை நாளின் விடியலில்....

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    ஒரு மழை நாளின் விடியலில்....

    ஒரு மழை நாளின் விடியலில்
    எனதறைச் சன்னலுக்கு வெளியே
    சன்னமாய் நனைகிறது உலகம்.

    எதிர்வீட்டு ஓட்டின் மேல்
    எதுகைத் தாளமிடும் மழைத்துளியும்
    எங்கிருந்தோ சுப்ரபாதமும்
    இசையாய் இணைந்து
    சப்தங்கலள் என்னுள்
    சந்தோஷம் தூண்ட.....


    விடிகாலை மழையில்
    விபரம் புரியா கனவுகளுடன்
    விவரிக்கவொண்ணா சிலிர்ப்பு
    என்னுள்.


    என் காதல்
    கனாக்காலங்களும்
    என் கவிதைக்
    களங்களும்
    என் மனங்கவர்
    மாந்தரும்
    என் இதயங்கவர்
    இசையுமாய்
    என்னுள் ஏதெதோ
    மதர்த்த குழப்பங்கள்.


    மடி நிறையப்
    புத்தகங்கள் .
    என்
    மனம் நிறையக்
    கனவுகள்.

    மனம் கிறங்கி நான்
    நாற்காலி மடியில்
    ஞானம் தேடும்
    புத்தனாய்
    ஞாலம் வேண்டும்
    கிறுக்கனாய்
    என் மோனக் குதிரையில்
    என் கவிதைக் காதலியுடன்
    கம்பீரப் பிருத்வியாய்.



    கவிதைச் சம்யுக்தையின்
    காலொடிக்கும்
    ஜெயச்சந்திரத் தகப்பனாய்
    என் தகப்பனின்
    கடிந்த குரல் என்னை
    கட்டாந்தரையில் தள்ள......



    இனிய மழையே!

    இதம் தரு கனவுகள்
    ஈந்த போதி மரமே!

    ஞானமும் ஞாலமும்
    ஞாபகமும் திறனும்
    கவியும் கல்வியும்
    ஏன் காதலும் தந்த
    கருணையே!

    விடை பெறுகிறேன் நான்.

    இனியொரு நாள்
    இடையூறுகளேதுமின்றி
    இன்பமாய்ச் சந்திப்போம்.

    பிறிதொரு நாள்
    பிரிப்பார் யாருமின்றி
    பிரியமாய்ச் சந்திப்போம்.

    நான் என் கவிதைகளுடனும்,
    நீ எனக்குத் தரவிருக்கும் கனவுகளுடனும்
    மட்டும்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    இது புதுக் கவிதையா, வசன கவிதையா இல்லை கட்டுரையா? எனக்கே தெரியாது. மன்னிக்கவும்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #3
    புதியவர்
    Join Date
    07 May 2005
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    //பிறிதொரு நாள்
    பிரிப்பார் யாருமின்றி
    பிரியமாய்ச் சந்திப்போம்.//

    மழையுடன் காதலா??.

    இனிமையான கவிதை, இனியன்!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி, இனியன்.

    இத்தகைய மழைக் கனவுகள் நிறய உண்டு எனக்கும்;

    பழையவற்றை நினைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கியது உங்கள் கவிதை.

    அது மட்டுமல்ல, கவிதைப் பக்கங்களில் வாசித்தற்குரிய ஒரு கவிதையும் உண்டாக்கித் தந்தமைக்கும் நன்றி.

    அன்புடன்,

    நண்பன்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதைதான் நண்பரே .. சந்தேகம் என்ன...

    கவிதையின் அர்த்தம் கவிஞனின் மனோநிலை சம்பந்தப்பட்டது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதன் கவித்துவம் மட்டுமே விமர்சனத்திற்கு உரியது,,

    தொடருங்கள்...

    வாழ்த்துக்களுடன்

    பிரியன்

    என்றும் அன்புடன்
    பிரியன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    நன்றாக இருக்கிறது இனியன் அண்ணா வாழ்த்துக்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அருமையான கவிதை இனியன்..



    கவிதைச் சம்யுக்தையின்
    காலொடிக்கும்
    ஜெயச்சந்திரத் தகப்பனாய்
    என் தகப்பனின்
    கடிந்த குரல் என்னை
    கட்டாந்தரையில் தள்ள......

    இந்த வரிகள் சரியாக புரியவில்லை..

    அன்புடன்
    மன்மதன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் அன்பரே...... நல்ல கனவுகள்... வரியாகியுள்ளது... இன்னும் கொடுங்கள்

    Quote Originally Posted by Nanban

    அது மட்டுமல்ல, கவிதைப் பக்கங்களில் வாசித்தற்குரிய ஒரு கவிதையும் உண்டாக்கித் தந்தமைக்கும் நன்றி.
    வாசித்தற்குரிய பல கவிதைகளை நண்பனிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதை அருமைங்க இனியன்... நல்ல வார்த்தை சொல்லாடல்... மன்றத்தினர் பார்வையிடவேண்டிய அழகிய கவிதை
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by Iniyan View Post
    [size=3][color=darkred]
    இனியொரு நாள்
    இடையூறுகளேதுமின்றி
    இன்பமாய்ச் சந்திப்போம்.

    பிறிதொரு நாள்
    பிரிப்பார் யாருமின்றி
    பிரியமாய்ச் சந்திப்போம்.

    .
    சற்றே ஜீரணிக்க கடினமான வார்த்தைப்பிரயோகம் நண்பரே.
    இதே தந்தை(பெற்றார்) இல்லாது வேற்று நபராக இருந்திருந்தால் வேறு. கவிதையின் நடையில் அழகாய் வடித்திருந்த கவிதைக்கு கறுப்புப்புள்ளிபோல் எனக்கு தோன்றுகிறது இந்சொற்பிரயோகம்.

    மற்றும்படி பிரமாதமான மழைக்காட்சி.

    கருத்தால் மனதை கனமாக்கின் மன்னிக்கவும். ஏனெனில் " கவிதை ஒன்றை எழுதுவது எந்தளவு கடினம் என்று அநுபவித்துக்கொண்டிருப்பவன் நான் (இன்றுவரை ஒன்றுகூட எழுதவில்லை...)"

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சொற்களின் ஆட்சி, அம்சமாய் பொதிந்த கவிதை.
    பெயரைப் போலவே, இனிமையாய் கவிதைகள் இன்னும் தரவேண்டும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •