அன்பு பாரதி...
முழுக்கக் கெட்டவர்களை முழுதும் விலக்கிவிடலாம்..
முழுக்க நல்லவர்களை இறுதிவரை நம்பிவிடலாம்..
ஆனால் ஆட்டுத்தலையும் பாம்புவாலுமாய் சிலர்..
பேச்சும் செயலும் பிணக்கிக்கொண்டபடி..
சில நேரம் நம்பலாம்..சில நேரம்...
வீட்டை இடித்து நிரூபிக்கவா? கடிதம் வேண்டாம் -இன்னும் நம்புகிறேன்
என்ற அணுகுமுறைக்கு மண்ணுறைப்பாம்பு போல் நழுவும் நபரை என்னென்பது? எப்படி வரையறுப்பது????
உன் ஆழ்ந்த மனத்தையும் கொந்தளிக்கவைக்கக்கூடிய சூழல் வரவைப்பது - வீடு கட்டுவது போன்ற சிலவற்றுக்கே சாத்தியம்..
உன் இடத்தில் ....என்னால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை..
நன்னீர்க்கிணறே கொதித்துச் சிதறியதென்றால்
என்னைப்போன்ற ''பிரஷர் குக்கர்'' வெடித்தேப் போயிருக்கும்..
அழகிய கோர்வையாய் உன் நினைவடுக்கை தேர்ந்த புடவை வணிகன் போல் நீ விரித்துக் காட்டிய பாங்குக்கு சிறப்புப் பாராட்டுகள்..
(பழமொழியை மாற்றிக்காட்டப்போகும் ராக்கிக்கு இரு முன் வாழ்த்துகள்..
ரசித்தேன் அந்தக் குறும்பை..)
Bookmarks