பெண்ணே!
உன்னை மட்டுமே என் கண்கள்
காட்டுகின்றன!
உன் பெயர் மட்டுமே என் காதுகளுக்கு
கேட்கிறது!
இதயம் உன் பெயர் சொல்லியே
இயங்குகிறது!
கைகளும் கால்களும் உன்னைத்தேடியே
அலைகின்றன!
நெஞ்சினிலே நிறைந்திருந்தால்
நினைவு மட்டுமே ஏங்கியிருக்கும்!
மூளையிலே உறைந்து விட்டாய்
வேறு பணிகள் நான் செய்வது எப்படி?
இப்படிக்கு
நிலா
Bookmarks