கிரிக்கெட் - சிறுகதை
சேப்பாக்கம் மைதானம்.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி. மைதானத்தில் பார்வையாளர்கள் குவியத்தொடங்கி விட்டனர்.
கசங்கிய காக்கி நிற பள்ளிக்கூட உடுப்புடன் மைதானம் வெளியே நின்றிருந்த முரளிக்கு எப்படியாவது இந்த மேட்சை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அவன் சேரியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில்தான் மைதானம் இருந்தாலும் அவனால் எங்கே காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க முடியும். மைதானம் வாசலில் நின்று உள்ளே நுழையும் கிரிக்கெட் வீரர்களை வேடிக்கை பார்த்துட்டு, வீட்டிற்கு ஓடி கருப்பு வெள்ளை டிவியில் கிரிக்கெட் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
இன்று எப்போதும் போல மைதானம் வெளியே நின்று வேடிக்கை பார்த்த கொண்டிருந்த போது , இந்திய அணியினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை பார்த்து கையசைத்த முரளிக்கு, தானும் மைதானத்தில் பார்வையாளனாக அமர்ந்து மேட்சை பார்த்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு பெருமூச்சு விட்டான்..
அப்பொழுது அவனை ஓரமாக நிற்க சொல்லி காவலாளி விரட்ட , அவன் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ஆஸ்திரேலிய அணி உள்ளே நுழைவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.. 'என்னடா காதிலே விழலையா' காவலாளி அவனை பிடித்து தள்ள, அவன் அங்கே கூட்டமாக காக்கி நிற யூனிபார்மில் வந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கில்கிரிஸ்ட் ஸ்பான்சர் செய்யும் காது கேளாதவர் பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் கலந்து அவர்களுடன் மைதானத்திற்குள் நுழைந்தான்..
ஆட்டம் ஆரம்பித்து சிக்சர்களும், போர்களும் பறக்க முரளியின் ஆனந்த கண்ணீர் அவன் வாய் கிழிய கிளம்பிய ஆரவார சத்தத்தில் கலந்து சென்றது..
-
மன்மதன்
Bookmarks