Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: இசைக்குயிலின் இனிய கீதங்கள் - அறிமுகம்.

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் rajeshkrv's Avatar
    Join Date
    05 Aug 2003
    Location
    Texas
    Posts
    1,208
    Post Thanks / Like
    iCash Credits
    21,893
    Downloads
    0
    Uploads
    0

    இசைக்குயிலின் இனிய கீதங்கள் - அறிமுகம்.

    இசைக்குயில் பி.சுசீலாவைப்பற்றி மன்றத்திற்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
    சுசீலாவிற்கு முன்னும் பின்னும் வெற்றிடமே -ஒரு ரசிகர் மெய் மறந்து ஆந்திராவில் சுசீலாவை புகழ்ந்து கூறியது. ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையும் கூட..

    என்ன ஒரு குரல் வளம் இவருக்கு. எந்த ஸ்தாயில் பாடினாலும் வார்த்தைகள் தெளிவாக நம் காதுகளில் விழும். அது பாடகர்/பாடகிக்கு மிகவும் முக்கியமில்லையா? ..அதில் முதலிடம் இவருக்கும் டி.எம்.எஸ்ஸக்கும்.

    எந்த வகை பாடலாக இருந்தாலும் குரலிலேயே பாவத்தை உள்ளடக்கி பாடுவதில் வல்லவர். இதற்காக குரலை மாற்றியோ, இல்லை வேறு மாதிரியோ பாடவேண்டியதில்லை..

    எத்தனை மொழிகள் எத்தனை எத்தனை பாடல்கள்..

    இவரை சந்திக்கவும் இவருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்வடையாத நாளே இல்லை.

    இவ்வளவு புகழ் பெற்றாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் இவரைப்பார்த்தால் ஆச்சரியம் தான் வருகிறது.

    10 பாடல்கள் பாடி புகழ்பெற்றால் சிலர் அடிக்கும் லூட்டிக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்மணியா?

    இதே வியப்போடு முதல் பாடலுக்கு செல்வோம்..

    இவர் அறிமுகமானது பெற்ற தாய் என்ற படத்தில்
    ஆண்டு

    56'துவங்கி இவர் பல பாடல்கள் பாட ஆரம்பித்தார்.

    கணவனே கண்கண்ட தெய்வம்
    இந்த படம் தான் இவருக்கு
    நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது


    இசையமைத்தவர்கள் - ஹிந்தியில் அப்பொழுது முன்னனிப்பாடகராக இருந்த
    உடன் உதவியவர்
    அதேபள்ளி ராமாராவ்


    புகழ்பெற்ற உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி என்ற பாடல்களை சுசீலா பாடியிருந்தார்

    ஆனாலும் அதே திரைப்படத்தில் என்னை மிகவும் கவந்த பாடல்
    அன்பில் மலர்ந்த நல் ரோஜா

    பாடலில் தோன்றிய நடிகை அஞ்சலிதேவி
    [i][b]
    இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 1


    அன்பில் மலர்ந்த நல் ரோஜா
    கண் வளராய் என் ராஜா




    தாலாட்டு பாடல்கள் என்றாலே சுகம்
    அதுவும் சுசீலாவின் குரலில் கேட்பது இன்னும் சுகம்..

    இந்த பாடலை கேளுங்கள் .. மென்மையான சோகம் கலந்த தாலாட்டு...
    சோகத்தை குரலில் எவ்வளவு அழகாக கொண்டுவந்திருக்கிறார் என்று தெரியும்

    அந்த ஆராரோவாகட்டும் தாலோவாகட்டும் எவ்வளவு மென்மை...

    ஒரே பாடலில் எத்தனை வகையான வேறுபாட்டை காட்டியிருக்கிறார் பாருங்கள்

    தாலாட்டு பாடல்களில் இந்த பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு..

    நண்பர்கள் பாடலை கேட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்

    பாடலை இங்கே கேளுங்கள்

    [size=2]http://psusheela.org/audio/ra/tamil/all/an...larnthanall.ram


    நன்றி
    ராஜ்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:57 PM. Reason: ஒருங்குறியாக்கம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான பாடலுடன் தொடங்கியிருக்கின்றீர்கள். தாலாட்டுப் பாடல்களில் அன்றும் இன்றும் என்றும் சுசீலாதான். தமிழில் அவர் பாடிய தாலாட்டுப் பாடல்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. அதனால்தான் இசையமைப்பாளர்கள் மாறியிருந்தும் கூட, இளையராஜாவும் சில தாலாட்டுப் பாடல்களுக்கு சுசீலாவையே பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "வரம் தந்த சாமிக்கு" பாடல்களைச் சொல்லலாம்.

    கணவனே கண்கண்ட தெய்வம் படத்திற்கு இசை ஹேமந்த்குமார் என்பது எனக்குப் புதுச்செய்தி.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:57 PM.

  3. #3
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    ராஜேஸின் சுசிலா பற்றிய தொடருக்கு எனது வாழ்த்துக்கள்.

    அவரது குரலின் இனிமை அனைவருக்கும் பிடிக்கும்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:57 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துகள் ராஜ் .தொடருங்கள் .....

    என்னால் மறக்க முடியாத பாடல்

    மாலை பொழுதின் மயக்கத்திலே...தினமும் மயங்கி கொண்டே இருக்கிறேன் ...அவர் காலத்தில் நாம் வாழ்வது வரமல்லவா நமக்கு
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:58 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் rajeshkrv's Avatar
    Join Date
    05 Aug 2003
    Location
    Texas
    Posts
    1,208
    Post Thanks / Like
    iCash Credits
    21,893
    Downloads
    0
    Uploads
    0
    இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 2

    1957..

    கணவனே கண்கண்ட தெய்வத்திற்கு பின் சுசீலாவிற்கு ஏறுமுகம் தான்..
    அதற்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்தது இந்த பாடல்

    ஆம்

    [b]<span style='color:green'>"அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ ? " </span>இந்த பாடலைக் கேட்டால் அந்த நிலவு அருகில் வராமல் இருக்குமா என்ன?
    அவ்வளவு அருமையான வரிகள். இனிமையான குரல்


    பத்மினி பிக்சர்ஸ் தயரிப்பில் வெளிவந்த படம் தங்கமலை ரகசியம்
    பத்மினி பிக்சர்ஸ் என்றாலே ஆஸ்தான இசையமைப்பாளர் திரு.டி.ஜி.லிங்கப்பா தான்

    [b]படம்: தங்கமலை ரகசியம்
    இசை: டி.ஜி.லிங்கப்பா
    வரிகள் : கு.மா.பாலசுப்பிரமணியம்
    ஒரு பருவப்பெண் இயற்கை அழகை ரசித்து பாடுவதாக அமைந்தாலும்
    பருவப்பெண்ணுக்கே உரிய நாணம், வெட்கம் எல்லாம் கலந்த பாடல்

    காட்சி இதுதான் ..
    காட்டிற்கு தந்தையுடன் வரும் ஜமுனா இரவில் குளத்தில் வெள்ளி தட்டு போல் ஜொலிக்கும் நிலவு தெரிய
    அந்த அற்புத காட்சியில் மயங்கி கானம் பாடுவதாக அமைந்த பாடல்..

    சுசீலா பாடும்விதமே அழகு...

    புதுமலர் வீணே வாடிவிடாமல்
    புன்னகை வீசி ஆறுதல் கூற ..

    மனதில் ஆசையை மூட்டிய பின்னே மறைந்தே ஓடிடலாமா
    சுசீலாவின் பாடல்களை பற்றி பேசினால் இந்த பாடல் நிச்சயம் இடம்பெறும்
    அந்த அளவிற்கு இந்த பாடல் அவ்வளவு அழகு.

    நடுவில் வரும் அந்த ஆ .... அகரம் ஆகட்டும்
    பின் பாடும்
    இனிமை நினைவும் இளமை வளமும் ஆகட்டும் .. அற்புதம்

    ழ ல ள மூன்றையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள்
    இவர் பாடல் கேட்டாலே போதும்..

    பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்


    http://us.f1f.yahoofs.com/bc/4576891...ahCrBBWr4Xmm5z

    நன்றி
    ராஜ்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:58 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான பாடல் ராஜேஷ். எனக்கு மிகவும் பிடித்தமான பாடலும் கூட. என்ன குரல்! என்ன குழைவு! என்ன உச்சரிப்பு! தமிழ் தமிழாகவே காதில் விழுந்து இதயத்தை நிறைக்கிறது. அற்புதம்.

    டி.ஜி.லிங்கப்பா திருச்சியைச் சேர்ந்தவர். நல்ல இசையமைப்பாளர். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலும் கன்னடத்தில் உள்ளது. பாடியது பி.சுசீலாவேதான். மிகவும் இனிமை. பாடல் வரிகள் இப்படிப் போகும்.

    அமரா மதுரா ப்ரேமா
    நீ பா பேக சந்த மாமா
    பா பேக சந்த மாமா

    எவ்வளவு கேட்டாலும் திகட்டாத பாடல். நினைவு படுத்தியமைக்கு நன்றி ராஜேஷ்.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:58 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உங்கள் கரங்களை என் கண்களில் ஒற்றி வாழ்த்துகிறேன் குருகுருவே..

    அமுதைப் பொழியும் இசைக்குயிலின் கானங்கள் பற்றி
    மழையாய்த் தொடர்ந்து பொழியுங்கள் ராஜ்..
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:59 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    அமுதை லொழியும் நிலவே- எனது மனதில் எப்போதும் ஓரும் பாடல்.
    சிறு வயதில் எங்கள் ஊரில் வந்தது. இன்னமும் ஜமுனா வின் முகமும், படல் முடிவில் சிவாஜியின் வருகையும் மறக்க முடியாத படம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:59 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    அமுது இனிப்பதில் வியப்பென்ன? அது போலவே குயிலின் இசையும்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 02:59 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #10
    இனியவர்
    Join Date
    24 Jan 2004
    Posts
    506
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இசைக்குயிலின் பாடல்கள் அருமை...
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 03:00 PM.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    சரியாகச் சொன்னீர்கள் ராஜேஷ்...
    [b]ல ள ழ மட்டுமல்ல.
    [b]ன, ந, ண வையும் இப்புதுமைப் பாடகர்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாது. அன்னன், அண்ணம், னண்மை, தநிமை என்றெல்லாம் இவர்கள் பாடும்போது கொதிக்கிறது.
    கண்டிப்பாக சுசீலா அவர்கள் பாடியவை பாடல்கள் அல்ல,
    இவர்களுக்குப் பாடங்கள் !!!

    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 03:00 PM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் rajeshkrv's Avatar
    Join Date
    05 Aug 2003
    Location
    Texas
    Posts
    1,208
    Post Thanks / Like
    iCash Credits
    21,893
    Downloads
    0
    Uploads
    0
    [b]இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 3
    1957

    தந்தை யாரோ தாயும் யாரோ ..

    படம்: யார் பையன்
    பாடல்: அ.மருதகாசி
    இசை: எஸ்.தக்ஷிணாமூர்த்தி, டி.சலபதிராவ்
    <span style='color:blue'>படத்திற்கு இசை தக்ஷிணாமூர்த்தி என்றாலும் இந்த பாடலுக்கு இசை திரு.டி.சலபதிராவ் அவர்கள் ..

    யார் பையன் ..தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்.. அந்த பையனாக நடித்தவர் டெய்ஸி ராணி.
    ஜெமினி, சாவித்திரி, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.மதுரம், சாரங்கபானி நடித்த படம்.

    வழியில் கிடைக்கும் ஒரு சின்னப் பையனால் விளையும் குழப்பங்களும் விளைவுகளும் தான் கதை.

    சாவித்திரியும், ஜெமினியும் காதலர்கள். ஜெமினி இந்த பையனை வீட்டிற்கு அழைத்து வர
    ஜெமினியின் அப்பா என்.எஸ்.கே உன் அப்பா யார் என வினவ அதற்கு அந்த பையன்
    " மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன் " என்று கூறும் விதமே அழகு.

    இந்த பாடலின் காட்சி இதுதான் ..
    தன் வீட்டில் வைத்துக் கொள்ளாமல் முதலில் தன் காதலி சாவித்திரி வீட்டில் விட்டு விடுகிறார் ஜெமினி.
    அவன் படுத்தும் பாடு சாவித்திரியால் தாங்கமுடியவில்லை. அவனை தூங்க வைக்க அழகாக பாடுகிறார்
    ஊடே வம்பு செய்தால் உன் கன்னம் என் கையால் வீங்கும் என மருதகாசியின் குறும்பான வரிகள் அற்புதம்.

    இது ஒரு வினோத தாலாட்டு.. அதையும் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார் மருதகாசி..
    மாலை சூடும் முன்னமே 7 வய்தில் ஒரு பிள்ளையை எனக்கு தந்தார் என..
    தாலாட்டு என்றால் சுசீலா என்று முன்னரே சொல்லியிருந்தேன். இங்கே வினோதமான தாலாட்டையும் எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்

    சுசீலாவின் குரலில் அந்த குறும்பும் உள்ளது.. அதே சமயம் அன்னை உள்ளமும் உள்ளது..
    அழகாக பாடியிருப்பார்.

    இசையும் வரிகளும் குரலும் சேர்ந்தால் "தேன் இனிமையிலும் சுசீலாவின் குரல் திவ்ய மதுரமாமே"

    கேட்டு மகிழுங்கள்
    தவறாமல் உங்கள் கருத்துக்களை தாருங்கள்

    http://psusheela.org/audio/ra/tamil/...aresong023.ram



    நன்றி
    ராஜ்</span>
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-06-2008 at 03:00 PM.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •