இசைக்குயில் பி.சுசீலாவைப்பற்றி மன்றத்திற்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
சுசீலாவிற்கு முன்னும் பின்னும் வெற்றிடமே -ஒரு ரசிகர் மெய் மறந்து ஆந்திராவில் சுசீலாவை புகழ்ந்து கூறியது. ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையும் கூட..
என்ன ஒரு குரல் வளம் இவருக்கு. எந்த ஸ்தாயில் பாடினாலும் வார்த்தைகள் தெளிவாக நம் காதுகளில் விழும். அது பாடகர்/பாடகிக்கு மிகவும் முக்கியமில்லையா? ..அதில் முதலிடம் இவருக்கும் டி.எம்.எஸ்ஸக்கும்.
எந்த வகை பாடலாக இருந்தாலும் குரலிலேயே பாவத்தை உள்ளடக்கி பாடுவதில் வல்லவர். இதற்காக குரலை மாற்றியோ, இல்லை வேறு மாதிரியோ பாடவேண்டியதில்லை..
எத்தனை மொழிகள் எத்தனை எத்தனை பாடல்கள்..
இவரை சந்திக்கவும் இவருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்வடையாத நாளே இல்லை.
இவ்வளவு புகழ் பெற்றாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் இவரைப்பார்த்தால் ஆச்சரியம் தான் வருகிறது.
10 பாடல்கள் பாடி புகழ்பெற்றால் சிலர் அடிக்கும் லூட்டிக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்மணியா?
இதே வியப்போடு முதல் பாடலுக்கு செல்வோம்..
இவர் அறிமுகமானது பெற்ற தாய் என்ற படத்தில்
ஆண்டு
56'துவங்கி இவர் பல பாடல்கள் பாட ஆரம்பித்தார்.
கணவனே கண்கண்ட தெய்வம்
இந்த படம் தான் இவருக்கு
நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது
இசையமைத்தவர்கள் - ஹிந்தியில் அப்பொழுது முன்னனிப்பாடகராக இருந்த
உடன் உதவியவர்
அதேபள்ளி ராமாராவ்
புகழ்பெற்ற உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி என்ற பாடல்களை சுசீலா பாடியிருந்தார்
ஆனாலும் அதே திரைப்படத்தில் என்னை மிகவும் கவந்த பாடல்
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
பாடலில் தோன்றிய நடிகை அஞ்சலிதேவி
[i][b]
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 1
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
தாலாட்டு பாடல்கள் என்றாலே சுகம்
அதுவும் சுசீலாவின் குரலில் கேட்பது இன்னும் சுகம்..
இந்த பாடலை கேளுங்கள் .. மென்மையான சோகம் கலந்த தாலாட்டு...
சோகத்தை குரலில் எவ்வளவு அழகாக கொண்டுவந்திருக்கிறார் என்று தெரியும்
அந்த ஆராரோவாகட்டும் தாலோவாகட்டும் எவ்வளவு மென்மை...
ஒரே பாடலில் எத்தனை வகையான வேறுபாட்டை காட்டியிருக்கிறார் பாருங்கள்
தாலாட்டு பாடல்களில் இந்த பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு..
நண்பர்கள் பாடலை கேட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்
பாடலை இங்கே கேளுங்கள்
[size=2]http://psusheela.org/audio/ra/tamil/all/an...larnthanall.ram
நன்றி
ராஜ்
Bookmarks