Results 1 to 3 of 3

Thread: 1965 சனவரி 26-ல் நடந்ததென்ன?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Apr 2003
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    8,999
    Downloads
    0
    Uploads
    0

    1965 சனவரி 26-ல் நடந்ததென்ன?

    2.4 மாணவர் போராட்டம்: சனவரி 26

    சிதம்பரம் நகரிளுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக (Annamalai University) மாணவர்கள் 1965 சனவரி 26-ம் நாளில் இந்தி திணிப்பையெதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். இந்தியெதிர்ப்பு முழக்கங்கள் எழுதப்பட்ட பெரிய அட்டைகளும், கொடிகளும் ஏந்தி, இந்தியெதிர்ப்பு முழக்கங்களை ஒலித்தபடி மாணவர்கள் பல்கலைக்கழக விளாகத்திலிருந்து ஊர்வலம் தொடங்கினர். தாரை தப்பட்டைகள் முழக்கினர். சங்கூதினர். ஊர்வலம் எந்தவொரு வன்முறையுமின்றித் தொடங்கியது. ஆனால், காவல்துறையினர் (police) ஊர்வலம் சிதம்பரம் நகருக்குள் போகலாகாதென்று கூறி ஊர்வலத்தைத் தடுத்தனர். மாணவர்கள் அதற்கிணங்காமல் தொடர்ந்து அமைதியாக முன்னேறினர். காவலர்கள் (police) ஊர்வலத்தைக் கலைக்குமாற்றான் துமுக்கியால் (துப்பாக்கியால்) ஊர்வலத்தை நோக்கிச் சுட்டார்கள். காவலர்கள் கண்ணீர்ப் புகை வீசி ஊர்வலத்தைக் கலைக்க முயன்றிருக்கலாம். அல்லது இழுவைத் தோட்டாகளைப் பயன்படுத்திச் சுட்டிருக்கலாம். அது யாரையும் கொன்றிருக்காது. (இழுவைத் தோட்டா = இரப்பர் தோட்டா = rubber bullet) ஆனால் மேலதிகாரிகளிடமிருந்து வந்த ஆணைப்படி எக்குத் தோட்டக்களைப் (steel bullets) பயன்படுத்தினார்கள். இராசேந்திரன் என்ற மாணவர் துமுக்கிச் சூடு பட்டு இறந்தார். நெடுமாறன் என்ற மாணவர் படுகாயமடைந்தார்.
    Last edited by சூரியன்; 21-05-2008 at 11:33 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இதனைக் கிளறுவதால் என்ன பயன்?
    Last edited by சூரியன்; 05-06-2008 at 03:59 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கரிகாலன் அவர்கள் கூறியபடி இந்த விஷயங்கள் இங்கே எதற்கு என்று தெரியவில்லை. இதற்கு ஏதாவது ஆதரவோ அல்லது எதிர்போ வரும் என்று தமிழன் அவர்கள் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது.
    Last edited by சூரியன்; 05-06-2008 at 04:00 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •