அடுத்த தலைமுறைக்கு,
அதாவது நம்ம குழந்தைகளுக்கு, நம்ம பேரன் பேத்திகளுக்கு,
என்ன கொடுக்கப்போகிறோம்?
* கார்பன் மோனாக்ஸைடு
கலக்காத காற்று...
* சக உயிர் துடிப்பதைக் கண்டு
கண்ணீர் விடும் மனசு...
* கரன்சி வாசத்துக்காக
சிரிக்காத மனிதன்...
* ஓட்டை இல்லா
ஓஸோன்...
* மனிதனை மனிதனாக
பார்க்கும் பார்வை...
* எரிவாயுக்காக அடித்துக்
கொள்ளாத நாடுகள்...
* ரத்தக் குளியல்
இல்லா பூமி...
* பிச்சைக்காரர்கள்
இல்லா தேசம்...
* ஊழல் இல்லா
இடம்...
* வறுமை, வன்முறை
இல்லா சமூகம்..
* மனசாட்சிக்கு மட்டுமே
பயந்து வாழும் வாழ்க்கை...
* பூட்டுக்களும், கதவுகளும்
இல்லா வீடு...
* இவற்றில் எவற்றைக் கொடுக்கப்போகிறோம்
அடுத்த தலைமுறைக்கு?
Bookmarks