Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: சங்கராச்சாரியர் கைது !

                  
   
   
  1. #1
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Posts
    116
    Post Thanks / Like
    iCash Credits
    9,019
    Downloads
    0
    Uploads
    0

    சங்கராச்சாரியர் கைது !

    கொலை வழக்கில் சங்கராச்சாரியர் கைது !
    நாடு எங்கே போகின்றது.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:23 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இந்தச் செய்தியை நேற்று இரவே அறிந்தேன். ஆனால் அது குறித்து பதிவு செய்ய விருப்பமின்றி இருந்தேன். காஞ்சிப் பெரியவர் எழுதிய 'தெய்வத்தின் குரல்' விரும்பிப் படித்திருக்கிறேன் - இன்று அதே மடத்தில் இருந்த வந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சி, திகைப்பு, வேதனை என அனைத்து உணர்ச்சிகளும் தாக்க, என்ன சொல்வது என்று அறியாது நிற்கின்றேன். அதை விடவும், இந்த கைதின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் வரும் நாட்களில் என்ற பதைபதைப்பும் இருக்கின்றது. இந்த கைதை அரசியல் ஆதாயத்திற்காக தவறான வழியில் திருப்பிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற பதைபதைப்பும் உண்டு.

    இந்த சந்தர்ப்பத்தில், நக்கீரன் பத்திரிக்கைக்கு, அவர் கொடுத்த பேட்டி மிக தவறான பதில்களைக் கொண்டுள்ளது. 'என் மீது பக்தி கொண்டுள்ள என் அன்பர்கள் சிலர் அந்தக் கொலையைச் செய்திருக்கலாம்' என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு அவர் காதிற்கு விஷயம் எட்டியிருக்கும் பொழுது, அவர் அந்த பக்தர்களை இனம் கண்டு, காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து, தயவு தாட்சண்யமின்றி களை எடுத்திருக்க வேண்டும். யாரோ சிலரைக் காப்பாற்ற எத்தனித்து, கடைசியில் அந்தப் பழியைத் தானே ஏற்க நேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. இப்பொழுதும் கூட அவர் காவல்துறையுடன் ஒத்துழைத்து, தன் மடத்திலுள்ள களைகளைக் களைந்து வெளிவர வேண்டும் என்றே விரும்புகிறேன்......
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:23 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    இனியவர் anbu's Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    UAE
    Posts
    637
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மதமும் மதத்தை பின்பற்றும் மக்களும் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தனி ஒரு மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த சம்பவம் மிக தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறது.

    எந்த கடவுளுக்கும் தேவைகள் என்பது இந்த உலகத்தில் இல்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மனம் திருப்தி படாத அளவுக்கு தேவைகள் என்பது இந்த உலகத்தில் கொட்டிக்கிடக்கிறது. அப்படிப்பட்ட ஆசைகள் நிறைந்த மனிதர்களை கடவுளுக்கு சமமாக நினைக்கும் காலம் இருக்கும் வரை இப்படிப்பட்ட தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:24 PM.

  4. #4
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    சுவாமிகள் பற்றி கண்ட படி எண்ணுவதோ சொல்லுவதோ கூடாது
    பத்திரிகைகள் எழுதுவதெல்லாம் உண்மையா?

    ___________________
    எண்ணம்,சொல்,செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:24 PM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இந்த வழக்கில் ஜெயேந்திரர் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டிருப்பார் என்று தெரியவில்லை. முழுவிசாரணை நடந்ததும் தெரியவரும். மேலும் தக்க ஆதாரங்கள் இன்றி ஒரு அரசு இப்படிப்பட்ட மடாதிபதியை கைது செய்ய விரும்பும் என்று நினைக்கவில்லை. காரணம் சின்ன தவறு நேர்ந்தாலும் அரசின் பெயர் கெட்டுவிடும். ஆக அனைத்து விவரங்களையும் வைத்தே அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கையில் கைது நடவடிக்கை சரியென்றே தோன்றுகிறது. ஆனாலும் வழக்கு முடியக் காத்திருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதே நேரம் யாரும் இந்த விஷயத்தை மதக் கண்ணோடத்தோடு அணுகாமல் இருக்க வேண்டும்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    புள்ளிமான் பெற்ற வள்ளிமானைத் திருடிய திருடன் யார்?
    http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92173#92173
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:24 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஒரு மடாதிபதியை, நிறைய பக்தர்கள் மத்தியில் பிரபலமான ஒருவரைக் கைது செய்வதற்கு முன் அரசு எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்கும் என்று நாம் யோசிக்கும் வேளையில், அவர் கைது செய்யப்பட்டு இத்தனை நாள் ஆகியும் அனைத்து விவரங்களும் வெளிவராமல் இருப்பதே இத்தகைய யூகங்களுக்குக் காரணம். நீதிமன்ற விடுமுறைகள் எல்லாம் இதற்கு ஒரு காரணமாகக் காட்ட முடியாது.

    ஆனால் மற்ற வழக்குகள் போல் இதனையும் மக்கள் நினைவில் இருந்து அகலும் வரை காத்திருக்க வைக்கக் கூடாது. காஞ்சி மடமும் இதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதில் இருந்து குற்றமற்று ஜெயேந்திரர் வெளிவருவாராயின் அது அவரைப் புடம் போட்ட தங்கமாகத்தானே அனைவருக்கும் காட்டும்? நாமும் அவ்வாறே நம்புவோம்.

    இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:24 PM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் rajeshkrv's Avatar
    Join Date
    05 Aug 2003
    Location
    Texas
    Posts
    1,208
    Post Thanks / Like
    iCash Credits
    21,893
    Downloads
    0
    Uploads
    0
    கைது இவ்வளவு அவசரமாகவும், கேவலமாகவும் நடந்திருக்க வேண்டியதில்லை
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:25 PM.
    இசையரசி பற்றிய BLOG
    http://isaiarasi.blogspot.com/

    இன்றைய பாடல் " தங்கரதம் வந்தது வீதியிலே"
    http://www.tamilmantram.com/vb/showt...t=17730&page=8

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் . இது கொலை வழக்கு .கொலை செய்யப்பட்டவரும் இந்து மதத்தவரே .அதனால் இந்த கைது இந்து மதத்தின் மேலான தாக்குதல் என்று சொல்லுவதுதான் அரசியல் . மதத்தை கலக்காமல் சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சனை இது. இன்று இந்த பிரச்சனையில் அக்கறை காட்டுபவர்கள் சங்கரராமன் குடும்பத்தை மட்டும் வசதியாக மறந்தது ஏனோ? பல மர்மங்கள் நிறைந்த வழக்கு இது. இறைவன்தான் உண்மைகள் வெளி வர உதவ வேண்டும் .

    சங்கராச்சாரியார் தன் தூய்மையை கட்டாயம் நிரூபிக்க வேண்டும் .
    அதுதான் காஞ்சி மடத்திற்கு அவர் செய்யும் அழகு ....

    இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    பிரதீப்
    எனக்கு காவிதான் தெரிகிறது ....சரியா பிரதீப் .....?
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:25 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  9. #9
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எண்ணம் என்பதே இதயத்தில்,உள்ளே எழுவது தான்
    வார்த்தை உதட்டால் வருவது,வெளியே அறிவிப்பது
    செய்கை உடலால் செய்வது, தானே தெரிவது
    எண்ணத்தை எல்லோராலும் அறிய முடியாது,வார்த்தைகளை
    செவிச் செல்வம் உள்ளவர்களால் அறிய முடியும்,செய்கைகளை
    பார்வை உள்ளவர்க்ளால் அறிய முடியும்.மூன்றும் ஒன்றானால்
    அனைவரும் அறிவர்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:25 PM.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் அறிந்ததை சொல்லி விட்டுதான் போங்களேன் .
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:25 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  11. #11
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Posts
    116
    Post Thanks / Like
    iCash Credits
    9,019
    Downloads
    0
    Uploads
    0
    சங்கராச்சாரியார் மீது மிக கடுமையான குற்றசாட்டுக்கள்
    நீதிமன்றத்தில் அரசு கூறுவது, மடத்தின் மீது சாதரண மனிதனுக்கு கூட சந்தேகம் வருகின்றதே?
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:25 PM.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    .... அவர் கைது செய்யப்பட்டு இத்தனை நாள் ஆகியும் அனைத்து விவரங்களும் வெளிவராமல் இருப்பதே இத்தகைய யூகங்களுக்குக் காரணம். நீதிமன்ற விடுமுறைகள் எல்லாம் இதற்கு ஒரு காரணமாகக் காட்ட முடியாது.
    எல்லா தகவல்களையும் வெளியே சொல்லக் கூடாது. அது சாட்சிகளைக் கலைக்கவும், வக்கில்களால் திசை திருப்பவும் முடியும். அதனால் நீதிமன்றத்தில் மட்டுமே, தனது சான்றுகளை காவல்துறை வெளியிட இயலும். அதனால், அவசரப்பட்டு, ஆதாரங்களைத் தர மறுக்கிறது காவல்துறை என எண்ணுவது சரியல்ல.

    என்றாலும், பத்திரிக்கைகள் தங்கள் தொடர்புகளால் அறிந்தவையாக வெளியிடும் பல தகவல்கள் திகைக்க வைக்கின்றன. கைபேசி மூலம் தொடர்புகள், பாங்க் கணக்கிலிருந்து பணம் சென்றதற்கான ஆதாரங்கள் என பல தகவல்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் ஆராயமல் எழுதுவதில்லை. காஞ்சி மடாதிபதி பத்திரிக்கைப் பேட்டியைப் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தனர். அதில் அவரே குறிப்பிட்டது, தன் மடத்தைச் சார்ந்தவர்கள், தன் மீது அக்கறை கொண்டவர்கள், தன் மீதுள்ள பக்தியால் கொலை செய்திருக்கக் கூடும் என்றே குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயமாக மறுக்கவில்லை - எந்த விதத்திலும் காஞ்சி மடத்திலிருந்து எவரேனும் கொலை செய்திருப்பார்கள் என்பதை. தன் முன்னாள் ஊழியர் ஒருவர், தன் மூத்தோரின் பணியாள் ஒருவர், கோயில் வளாகத்தினுள் படுபயங்கரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதைப் பற்றி வருத்தமோ, அல்லது அந்த கொலையாளிகளை இனம் காண வேண்டும் என்ற ஆதங்கமோ இல்லாது அமைந்த அந்த பேட்டியில், மற்றும் பல விஷயங்களை கோடி காட்டியிருக்கிறார் - குறிப்பாக, இளைய மடாதிபதியின் சகோதரரைப் பற்றியது. அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'பெண் சபலம் உடையவர் தானே தவிர, கொலை செய்யும் அளவிற்கு செல்ல மாட்டார்' என சான்றிதழ் தருகிறார். பெண்களுக்கு எதிராக நிக்ழ்த்தப்படும் கொடுஞ்செயல்கள் சரி என கருதுகிறாரா? சட்டத்தினால் தண்டிக்கப்படாத அளவிற்கு, பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் செய்தாலும் கூட, மடத்தின் புனித தன்மையைக் கருதி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமோ?

    ........ஆனால் மற்ற வழக்குகள் போல் இதனையும் மக்கள் நினைவில் இருந்து அகலும் வரை காத்திருக்க வைக்கக் கூடாது. காஞ்சி மடமும் இதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதில் இருந்து குற்றமற்று ஜெயேந்திரர் வெளிவருவாராயின் அது அவரைப் புடம் போட்ட தங்கமாகத்தானே அனைவருக்கும் காட்டும்? நாமும் அவ்வாறே நம்புவோம்.
    இது தான் சரியான அணுகுமுறை. முறைப்படியாக வழக்குகளைச் சந்தித்து, குற்றமற்றவர் என்று நிருபணம் செய்து வெளிவர வேண்டும் தான். ஆனால், அதற்குள், விஷ்வ ஹிந்து பரீஷத், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டங்களில் இறங்குவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தில் இறங்குவதோடு மட்டும் அல்ல, நீதியை அச்சுறுத்தும் வகையில் தங்கள் போராட்டத்தை வழி நடத்துவது தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்தினுள் வக்கீல்கள் மீது தாக்குதல் என்பது தேவையற்றது. அதுபோல ஹைதரபாத் நகரில் போராடியவர்கள் சில அரசியல் பிரமுகர்களின் உருவ பொம்மையை எரித்தது போன்ற தவறான செயல்கள் எந்த விதத்திலும் நீதியை நிலை நாட்டும் செயல் அல்ல.



    ........இதற்கு மதச் சாயம் மட்டுமல்லாது அரசியல் சாயமும் பூசுவதற்கென்றே சிலர் (உங்கள் அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன்) காத்திருக்கிறார்கள். அரசு பாரபட்சமற்ற நடவடிக்கையில் இறங்கும் என்றே அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.
    இருக்கலாம் - இந்துத்வா அமைப்புகளால் இருக்கலாம். மற்ற எல்லோருமே அதிர்ச்சியால் அதிர்ந்து போய் இருக்க, இந்துத்வா அமைப்புகள் மட்டுமே, மத, அரசியல் வர்ணங்களை எல்லோர் மீதும் அள்ளித் தெளிக்க முயற்சிக்கிறது.

    எவருமே, காஞ்சி சுவாமிகள் கொலை செய்திருக்க மாட்டார் என்று போராட்டத்தில் இறங்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்தது தான் தவறு என்று கூறுகிறார்கள். கொலை செய்திருப்பார் என்று ஆணித்தரமாக மறுக்க விரும்பாதவர்கள், கைது செய்யக் கூடாது என்று போராடுவது சரியல்ல. மேலும், சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு - கொலை. இது அரசியல் ரீதியான வழக்குகள் அல்ல. பொருளாதார குற்றங்களினால் விளைந்த வழக்கு அல்ல. சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஏற்ப, நடவடிக்கை எடுப்பது என்பது தான் முறை. இதில் மத, அரசியல் உள் நோக்கங்கள் கிடையாது.

    ஆனால், இந்துத்வா அமைப்புகளின் தலைவர்களின் பேச்சில் மற்ற மதத் தலைவர்களை இது மாதிரியாக ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஒப்பீடு தவறுதலானது மட்டுமல்ல, மற்ற மதத்தினரையும் வம்பிற்கு இழுப்பது போன்றவையாகும். மேலும், எல்லார் ஆத்திரமும் கருணாநிதியின் மீது திரும்பியுள்ளது. ஏன்? கைது செய்தது, மடத்தின் ஆஸ்தான சீடர்களில் ஒருவரான ஜெயலலிதா ஜெயராமன். காஞ்சி சுவாமிகளின் பக்தை. ஹிந்து ஆசாரங்களில் மிகவும் நம்பிக்கையும், சோதிடம், யாகங்கள் என்று ஹிந்து தர்மத்தின் அனைத்தையும் வழிபட்டு நிற்பவர். (பலர் அடைந்த அதிர்ச்சிகளில் ஒன்று - ஜெயலலிதாவா சுவாமிகளைக் கைது செய்தது என்று?) அவரை விட்டுவிட்டு, கருணாநிதியின் மீது பாய்வது என்பது தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டியது என்று சொல்வது போல் தான். இத்தனைக்கும், ஜெயலலிதாவை தலை மேல் வைத்து கொண்டாடியவர்கள் தான் இவர்கள். இந்தியாவில் இந்துத்வாவை காப்பதற்கு, மோடி, ஜெயலலிதா இவர்கள் தான் தேவை - வாஜ்பாயோ, அதவானியோ அல்ல என்று சொல்லுமளவிற்கு அவரது புகழ் பாடியவர்கள், இன்று அவர் செய்த செயலுக்கு, அடுத்தவர் மீது பாய்கின்றனர்.

    கருணாநிதி கொடுத்த அழுத்தம் தான் காரணம் - காஞ்சி சுவாமிகள் கைது செய்யப்படுவதற்கு என்பது ஏற்க முடியாத வாதம். 'சங்கரராமன் கொலையில், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியே திரிகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படவேண்டும். அதற்காகப் போராட்டத்தில் இறங்குவோம்' என்று அறிவிக்கிறார். இது தவறா? குற்றவாளிகளைக் கைது செய் என்று அரசிடம் முறையிடுவது தவறா? அதாவது, இந்துத்வா ஆதரவாளர்களின், முறையீடு என்னவென்றால், கருணாநிதி சும்மா இருந்திருந்தால், அம்மாவும் சும்மா இருந்திருப்பார் என்று இருக்கிறது. ஜெயேந்திரர் கொலை செய்தாரா, அல்லவா என்பதெல்லாம் அவர்கள் கவலை இல்லை. ஆனால் தங்கள் மதத்தின் புனித அமைப்பின் அஸ்திவாரத்தை அசைத்து விட்டார்களே என்று ஆதங்கப் படுவதில் அர்த்தமில்லை.

    இந்த விவகாரத்தை, அரசியலாக்குவதோ, மதமாக்குவதோ இந்து அமைப்புகளின் கையில் தான் இருக்கிறதே தவிர, மற்றவர்கள் கையில் இல்லை.

    பலமுனைகளிலும் தோல்வியைச் சந்தித்து வந்த ஜெயலலிதா, தன் சரிவை சரிக்கட்ட முனைதிருக்கும் வேளையில் காஞ்சி சுவாமிகளின் மீது எந்த ஆதாரமுமில்லாமல், கை வைத்து, மேலும் தனக்கு அவப்பெயர் தேடிக்கொள்ள முனைய மாட்டார். ஆக, வலுவான ஆதாரங்கள் அவரிடம் இருக்கத் தான் செய்யும். இனி எத்தனை சிரத்தையாக இந்த வழக்கைக் கொண்டு செல்கிறார் என்பது தான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்.

    எது எப்படியோ, சங்கரராமன் தன் கல்லறையில் நிம்மதியின்றி உழன்று கொண்டிருப்பார் - இந்த வழக்கு முடியும் வரையிலும்.....
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:26 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •