நண்பர் கூறுவதும் உண்மைதான். ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கையில் எல்லா விவரங்களையும் வெளியே சொல்வது நன்றன்று. அது அந்தச் சாட்சியங்களைக் கலைக்க உதவும். இந்துத்துவா அமைப்புகள் இந்த விஷயத்தில் மதச்சாயம் பூசக்கூடாது. வேறு எந்த மதத்தினர் செய்திருந்தாலும் இது போன்ற நடவடிக்கை சரியாகத்தான் இருக்கும். இது மத விஷயமல்ல. சட்டம் ஒழுங்கு தொடர்பானது. ஆகவே மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய விஷயம்.
ஒரு நடவடிக்கை எடுக்கும் முன்னம் ஜெயலலிதா பலமுறை சிந்தித்திருப்பார் என்றே கருதுகிறேன். வழக்கு நியாயமாகச் செல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. மேலும் நேற்றைய ஜெயலலிதாவின் சட்டமன்றப் பேச்சும் (அவைக்குறிப்பில் இடம்பெற்றது) அதிர்ச்சியைத் தருகிறது. மற்றொரு கொலைக்கும் திட்டம் தீட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். எதை நம்புவதென்றே தெரியவில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பது ஜெயலலிதாவிற்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியும் சில அரசியல்வாதிகளின் பேட்டியும் நாகரீகமாக இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.
அன்புடன்,
கோ.இராகவன்
அரைமூடித் தேங்காய்ச் சாமியாருக்கு மாரப்பன் முக்தி கொடுத்தது எப்படி? இதோ இப்படி!
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=92224#92224
Bookmarks