நான் அப்பவே அப்பாகிட்டே சொன்னேன்.. எனக்கு டவுனிலே போயி எல்லாம் படிக்க முடியாது.. கிராமத்துலேயே வளர்ந்திட்டேன்.. பேசாம உங்க கூட ஒத்தாசையா இருந்திடறேன்.. விவசாய கணக்கு வழக்கெல்லாம் பார்த்துட்டு இங்கெனெயே இருந்திடறேனு சொன்னதை கேட்டாத்தானே.. அதெல்லாம் முடியாதுன்னு ஒத்தை வரில 'போயி படி, படிச்சுட்டு உசரதுக்கு வரணும்'ன்னு சொல்லி அனுப்பினார்..
இங்கே முதல் நாளே உசரதுக்கு வந்துட்டேன்.. ஏதோ எளவு ராக்கிங்காம்... .. இந்த காலேஜ் ரேக்கிங் எலவெல்லாம் எவனுக்கு தெரியும்.. ஏதோ நீச்சலடிக்க சொல்வானுவுளா, சிகரெட் வாங்கியாந்து கொடுக்க சொல்லுவானுவொளா? என்ற மனக்குழப்பத்தில் காலேஜில் மொதல் நாளு உள்ளே நுழஞ்சா வகுப்புக்கே உட மாட்டேன்றானுவோ.. கேள்வி மேலே கேள்வியா கேட்கறானுவோ.. அதுவும் காதலப்பத்தி..அட அதுவும் என்கிட்ட..மாணவனா சேர்ந்து கிராமத்துல வாத்யாரை கலாய்ப்பொம்.. இங்கே மாணவனே மாணவனை .. அடச்சே... சொல்றதுக்கு வெட்கமா இருக்கு..
வணக்கம் சொல்லியவுடனே ரொம்ப சின்சியாரிட்டியா கேள்விய ஆரம்பிக்கிறானுவோ.. 'யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..'
'டேய் இதெல்லாம் தெரிஞ்சு என்னதான் பண்ண போறிங்க.. அரியர்ஸ் கம்ப்ளீட் பண்ண என்னோட பதில் உதவுமா? பசங்க ரொம்பத்தான் அலையிறானுங்கப்பா..' மனதுக்குள் திட்டிகிட்டே..'பழக்கமில்லிங்க.' என்றேன்..
'ஆஹ்.. பழக்கமில்லையா.. வேற என்னதான் பழகிகிட்டே..'
'எனக்கு லவ் பண்ணின அனுபவம் இல்லீங்க..'
வரிசையா ஒண்ணாம்புல சரசுகிட்ட ஆரம்பித்த காதல் ரண்டாவது படிக்க போது துல்சிகிட்ட ஒட்டிகிச்சு.. அப்படியே ஒவ்வொரு வகுப்பா மாறி மாறி பண்ணாட பண்ணண்டாவது படிச்சாச்சி. நம்மூருல நம்ம ரவுசுதான். ஆனாலும் அசலூருக்கு அதுவும் டவுனுக்குள்ளே நுழஞ்சது நம்ம டகரு எல்லாம் பொட்டி பாம்பா அடங்கிடுச்சுல்ல.. நாமதான் அன்னலட்ச்மி, கௌரி, மீனு என்று அல்லாரையும் சுத்தி நிக்க வைச்சு, கோகுலத்தில் கிருஷ்ணன் மாதிரி சேஷ்டை பண்ணிய காலம் போயி இன்று பொண்ணுங்க கேட்குற கேள்விக்கெல்லாம் பதிலு சொல்ல முடியாம தவிக்கிறேன்.. ச்சே.. கிராமத்துலேயே காலேஜு இருந்திருந்தா எவ்ளோ சௌகரியமா இருந்திருக்கும்.. டவுனு பொண்ணுங்க வந்தா கூட கவுனு பறக்க வச்சிருப்போம்ல..
'சரி.. அப்ப நீ இங்கே படிக்க லாயக்கில்லாத ஆளு, கிளம்பு ஊர பாக்க''
'(அய்யோ, பக்கத்திலே நிற்கிற அம்சவேணியை லவ் பண்ணி என்னோட தெறமையை காண்பிக்கலாம்னா, ஊருக்கே திருப்பி அனுப்புறாவுவளே.. என்ன பண்ணலாம்..சரி கொஞ்சம் அவுத்து விடலாம்...)
நாக்கை புடிக்கிற மாதிரி கேட்கறானுவோ.. என்ன சொல்லலாம்.. ஆங்... 'நாலாவது படிக்கிறப்ப நான் நாகலட்சுமியை லவ் பண்ணினேன்'
'அவ கொத்தினாளா?' சூழ்ந்திருந்த கூட்டத்திலேர்ந்து எவளோ ஆர்ப்பரித்தாள்..
எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னது..
'என்னடா யோசிக்கிறே.. நாகலட்சிமி என்னா பண்ணினா..'
'ஒண்ணும் பண்ணலைங்க.. அப்ப நாலாவதுதான் பட்டிச்சேனா.. ஒண்ணும் தெரியாது..
'நாக லட்சுமிக்கு என்னை பார்த்தாலே வெட்கம்.. ஓடி ஒளிஞ்சுக்குவா.. எங்க ஸ்கூலூ மரத்திலே நிறைய புலிமாங்கா அவளுக்கு பறித்து தருவேன்..'
'ஆஹா, புலிமாங்கா கொடுத்து கரெக்ட் பண்ணினவனா நீ'
'இத பாருங்க, இப்படி இடையிடையிலே கேட்டா எனக்கு சொல்ல வராது, ஆமாம்'
'என்னடா ஓவரா பேசுறே, சரி..சரி.. உன்ட்ட எங்க டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.. ஒரு சல்யூட் வைச்சுட்டு போ..'
நான் சாதாரண சல்யூட் வைக்க ..
'இப்படி சாதா சல்யூட் எல்லாம் வேண்டாம், ஒரு ஸ்பெஷல் சல்யூட் வை'
'அது என்னங்க ஸ்பெஷல் சல்யூட்'
'அங்கே பொத்தி, சும்மா ஹாயா ஜம்ப் பண்ணி வையிடா, இது கூட தெரியாம உன்னை எந்த முட்டாபயடா இங்கே சேர்த்தது'
'பிரின்சிபால்தான்'
அடுத்த நாள்...
சைக்கிளில் வேகமாக மிதித்து கல்லூரிக்கு வரும் போது நேற்று கும்பலில் கலாய்த்த ஒருவன் என்னை ஓரங்கட்டினான்.. மருவாதையாய் கூப்பிட்டான்..
'பிரதர்.. கல்லூரி முதல் நாள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. கோபம் இல்லையே...'
'ஆஹா.. பொடியை தூவறானே.. தும்மிடக்கூடாது' என்று மனதுக்குள் நினைத்து 'அட பரவாயில்லிங்க.. எனக்கு தெரிஞ்ச விசயம்தானே'
'அப்பாட இப்பத்தான் நிம்மதி.. நீங்க பக்கத்து கிராமத்திலேர்ந்துதானே வர்ரிங்க..'
'ஆமாம்.. நீங்க..'
'நான் உங்கூருக்கு பக்கம்.. கல்லூரில் வரும் போது உங்க கிராமம் வழியாத்தான் வருவேன்.. '
தலையை ரொம்பவேத்தான் சொறியிறானே.. என்ன விஷயமாக இருக்கும்..
'இல்லை.. வர்ர வழியில ஒரு கோவில் இருக்கில்லையா.. அதன் பக்கத்து வீடு செண்பகம் என்னோட ஆளு, நீங்கதான் பேசி எப்படியாவது கரெக்ட் பண்ணி கொடுக்கணும்..'
'டக்'கென்று என் தலையில் இரண்டு கொம்பு முளைத்த மாதிரி இருந்தது.. நேற்று எல்லோர் மத்தியிலும் அன்னை அவமானப்படுத்திட்டு இன்று என் கிராமத்து குயிலையே நீ அமுக்கிறியா..எத்தனை பேரு கனவிலே அவ பேரை உளறுரானுவோ.. அவ்ளோ ஈசியா நீ மடக்கிடுவியா.. இரு..இரு..
'அதுக்கென்ன .. பண்ணிட்டா போச்சு..உங்க பேரு என்ன?'
'முருகேஷ்'
'நிறைய கேஷ் இருக்குமோ?'
சிரித்தான்.. ஊரிலே நாங்கதான் பண்ணையார் குடும்பம்..
(போடா வெண்ணை.. நேற்றைய சம்பவத்துக்கு நான் உன்னை பழிக்கு பழி வாங்காம விடமாட்டேன்...)
நான் வகுப்பில் அவனை எப்படி பழி தீர்ப்பது என்று சீரியஸா நினைத்துக்கொண்டிருந்த போது 'மின்னல்' ஒன்று ஒரு பல் செட்டுகளுக்கு இடையில் மின்னியது. கண்கள் கூசினாலும் என்ன அது என்று பார்த்தேன்.. அடடா.. ரம்பை நேரில் வந்த மாதிரி ஒரு அழகு.. என் வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்த என்னை பக்கத்தில் இருந்தவன் உசிப்பினான்..
'டேய் அது பைனல் இயர் முருகேஷின் தங்கச்சி..பேரு மீனா..பணக்கார இடம்.. பையனும் ஒரு மாதிரி.. பார்த்துக்கோ..'
அடுத்த நாள்..
செண்பகத்திடம் கெஞ்சாத குறையாக...
'இதோ பாரு செண்பகம்.. அவன் ஒண்ணும் உன்னிடம் டைம் பாஸ் பண்ணனும்னு சொல்லலை.. ஊர் சுத்தணும்னு ஆசைப்படலை.. இங்கே இருக்கிற பசங்க எல்லாம்.. ஏன் என்னையும் சேர்த்து , உன்னிடம் வழியிறோமே.. ஆனால் முருகேஷ் ரொம்ப டீசண்ட் டைப். உன் ப்ரெண்ட்சிப் வேணும்னு ஆசைப்படறான். அவனிடம் ஒரு ஹலோ மட்டும் சொல்லிடேன்'
முதல் முறை இன்னொரு பையனுக்கு வக்காலத்து வாங்கும் என்னை ஆச்சரியமாக பார்த்தாள் செண்பகம்..
இந்த ஹலோ மட்டும் முருகேசுக்கு கிடைத்தால்.. மீனாவின் ஹலோ எனக்கு கிடைக்கும்.. அந்த முருகேஷ் பய மட்டும் இல்லை, எந்த பயலும், என்னிடம் என் காதல் அனுபவத்தை கேட்டுத்தெரிந்து கொள்ள தேவையில்லை..ஹிஹி.
----
மன்மதன்
பி.கு.. இது இரண்டாவது கதை.. கதையில் உண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுததான் கதை கதை மாதிரி வருமாம்.. இரண்டாவதுதானே..பொறுத்தருள்க..
Bookmarks