கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை துவக்கம்
சென்னையில் 17 அக்டோபர் அன்று திரு.எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களால் நிறுவப்பட்டது.
முதல் சொற்பொழிவு ஆற்றியவர் கவிஞர் வாலி அவர்கள்
மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சாதனையாளர்கள் -
ஆம் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கவி மார்க்கண்டேயர் வாலி, திரு.ஏ.வி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி,எஸ்.பி.முத்துராமன், மனோரமா, திரு.முரளி(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) ஆகியோர்.
துவக்க உரையாற்றியவர் எம்.ஏ.எம் அவர்கள். அவருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த தொடர்பு பற்றி கூறினார்.
பின்னர் நல்லி பேசினார்.
மனோரமா தான் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் கண்ணதாசன் என்று கூறினார்.
அடுத்த கட்டம் முக்கிய கட்டம்...ஆம் வாலி பேசினார்
கரவொலி தான் அரங்கமெங்கும்..
"கண்ணதாசனும் விஸ்வனாதனும் அன்று இணைந்தது ஆண்டவன் கட்டளை....
இன்று இணைந்தது அறக்கட்டளை... இவை இரண்டுமே அந்த ஆண்டவன் கட்டளை" என்று தொடங்கும் கவிதை ஒன்றை வாசித்தார். அவருக்கும் கவிஞருக்கும் இருந்த நட்பை பற்றி பேசினார்.
பின்னர் இசை நிகழ்ச்சி(எம்.எஸ்.வி -டி.கே.ஆர்)
பி.சுசிலாவை அழைக்க முதல் பாடலாக வணக்கம் வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன்.
சுசீலாவின் குரலில் கான மழை
பின் மாதவி பொன் மயிலாள்
பின் எஸ்.பி.பாலா பாட வந்தார்
வான் நிலா நிலா அல்ல
எங்கேயும் எப்போதும்
கம்பன் ஏமாந்தான்
மற்றும் இனிமை நிறைந்த உலகம் இருக்கு (எல்.ஆர்.ஈஸ்வரியுடன்)
ஈஸ்வரி தனித்து
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
பட்டத்து ராணி பாடினார்
அறக்கட்டளை ஓங்கி வளர எல்லோரும் வாழ்த்தினார்கள்.
இதை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...
ராஜ்
Bookmarks