Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15
Results 169 to 172 of 172

Thread: புறநானூற்றுக் கவிதைகள்

                  
   
   
  1. #169
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அனைவருக்கும் நன்றி சொல்லித் தொடர்கிறேன்..

    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    புறநானூற்றுக்கவிதை − 6
    பாடியவர் : புலவர் பரணர்
    பாடப்பெற்றவர் - வையாவிக் கோப்பெரும் பேகன்
    பாடாண்திணைப் பாடல்..

    பாணன் சூடிய பசும்பொன் தாமரை
    மாண் இழை விறலி மாலையொடு விளங்கக்
    கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
    ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
    யாரீரோ என வினவல் ஆனாக்

    கார் என ஒக்கல் கடும்பசி இரவல!
    வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
    நின்னினும் புல்லியேம் மன்னே! இனியே
    இன்னேம் ஆயினேம் மன்னே! என்றும்
    உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்,

    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
    கடாஅ யானைக் கலிமான் பேகன்
    எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
    மறுமை நோக்கின்றோ அன்றே! பிறர்
    வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே!−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


    மயிலுக்கே போர்வை தந்த..

    '' பாணனாகிய நீவிர் அணிந்த பொன் தாமரையும்
    பக்கத்தில் உள்ள உம் விறலி அணிந்த பொன்மாலையும்
    ஓரத்தில் நிற்கும் குதிரைத் தேரும்
    'இன்னொரு தேசத்து ராஜா இங்குவந்து
    இளைப்பாறுகிறாரோ 'என
    எண்ண வைக்கிறதே...
    எவரோ நீவிர்?'' எனக் கேட்டவனே..கேள்!

    உற்றத்துடன் பசியில் உழலும் இரவலனே!
    வெற்றிவேல் அண்ணலைக் காணும் முன்னே
    உன்னைவிட வாடி இருந்தவர்கள் நாங்கள்..
    இன்றைக்கு அந்நிலைமை இல்லை!!
    என்றைக்கும் அணியாது என அறிந்தும்

    போர்வையை மயிலுக்கு ஈந்த எம் மன்னன்
    போர் யானைகள், குதிரைகள் கொண்ட பேகன்
    எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுப்பவன்
    அடுத்த பிறவியில் வரும் நன்மைக்காக அன்று..
    அடுத்து நிற்பவன் வறுமை பார்த்த
    அவன் கை வள்ளல்தன்மையால்!
    Last edited by இளசு; 31-07-2007 at 04:46 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #170
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மஞ்ஞை = மயில்...! இன்று கற்றேன் அண்ணா... கலிமான்..?? அக்காலத்தில் இருந்த கொடைத்தன்மை..அல்லது புலவர்களின் கைவண்மை..? எதுவாக இருப்பினும் புறந்தள்ளி வைத்திருந்த நானூறை அகத்தே ஏற்றும் அண்ணனுக்கு அன்பு.

  3. #171
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆதவா, ஓவியா, வாத்தியார், பாரதி..

    ஊக்க மொழிகளுக்கு காலம் தாழ்த்திய நன்றி!

    மனம் இளைப்பாற வேண்டும்போதெல்லாம் இலக்கிய நிழல்தான் துணை..

    விரைவில் தொடர முயல்கிறேன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #172
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அருமையான புறநானூற்றுப்பாடல்களுக்கு எளிமையான விளக்கம் தந்து கவி பாடிய பாங்கே என்னை நெடுநல்வாடையை நுகரச் செய்து விளக்கப்பாடல் எழுதவும் வைத்தது. நன்றி பல இளசு அவர்களே.

    மீண்டும் புறநானூற்றுப்பாடல்களை உங்கள் வாயிலாய்ச் சுவைக்கக் காத்திருக்கிறோம். தொடர்வேன் என்றதும் துள்ளுகிறது மனம்.

Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •