என் கவிதைகளுக்கு
வார்த்தை சிக்கல்
ஏற்படுத்திக் கொடுப்பதில்
நீ ஒரு கசடதபற..
குழைத்த வார்த்தைகளை
பரவாயில்லை என
அள்ளி வீசும் பொழுது
நீ ஒரு ஙஞனநமண...
குறியீடுகள் அள்ளிக்
கொடுத்து இந்தா
விளையாடு என் சொல்லும் பொழுது
நீ ஒரு யரலவழள...
'நீரின்றி அமையா உலகு'
நீ இன்றி அமையா என் கவிதை...
வாழ்க நீ பல்லாண்டு..
Bookmarks