அடுத்தவர் எச்சில்
டம்ளரை கழுவி
வயிறு கழுவும் கூத்துக்கள்
நடக்கும்..
தீப்பெட்டி தொழிற்சாலையின்
கந்தகங்களை
சுவாசித்து
பாழாய்ப்போன நுரையீரலுக்கு
சொந்தக்காரனாயும்
பள்ளி சென்று கணக்கு
படிக்கும் வயதில்
அடுத்தவர் குடிக்கும்
சாராய பாட்டில்களின்
கணக்கை எண்ணியும்...
பேனா பிடிக்கும் வயதில்
கையெல்லாம் கிரீஸாகி
ஸ்பேனரும் பிடிக்கும்..
நோட்டுப் புத்தகங்கள்
சுமக்கும் வயதில்
பொட்டலம் மடித்தும்...
இன்னும் பலவும் உண்டு..
எல்லாம் சுகப்பட்டதல்ல..
ஒன்றுக்குமேல் தேச குற்றம்
என்று அறிவியுங்கள்
அல்லது
குழந்தைகள் தினம் கொண்டாடுவதை
நிறுத்துங்கள்...
Bookmarks