Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: கனவுக் கன்னி......

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    கனவுக் கன்னி......

    கனவுக் கன்னி...

    சூன்யத்தில் சிக்கிய
    ஒரு நாளில்
    பணியேதுமின்றி
    கிடக்கிறது உடல்.

    ஓய்வெடுக்கப் பணித்தால்
    உடல் பிரிந்து
    மனம்
    தறிகெட்டு ஓடுகிறது -
    கருப்பும் வெளுப்புமான
    சிறகுகள் முளைத்த
    குதிரையில்...

    பறப்பதே பிறப்பாய்
    காற்றைத் துளைந்து
    எல்லைகள் கடந்து
    கால் பதித்த இடத்தில்
    ஆடைகளே சுமையாய்
    ஏதோ ஒரு பெண்...

    முகம்
    ஏறிட்டு நோக்கினால்
    வட்டம் இருக்கிறது -
    கண், மூக்கு, காதின்றி.

    அன்றைய தேவையாக
    அவள் மட்டுமென
    குனிந்து
    முத்தமிட்டு முகர்கையிலே
    மனம் பதிக்கிறது
    கண், மூக்கு, காதுகளை
    அந்த வெற்று வட்டத்தில்.

    உறவை முடித்து
    மீண்டும் முகம் நோக்கினால்
    அதே
    வெற்று வட்டம்.

    தட்டி எழுப்பி
    காப்பி தரும்
    மனையாட்டியின்
    வட்ட முகத்தில்
    கண், மூக்கு, வாய்
    இருக்கிறது -
    மனம் வடித்த
    இடங்கள் பிசகி...

    திரும்ப வந்து
    உடலோடு
    ஒட்டிக் கொள்கிறது
    மனம் -
    பறந்து திரிந்த
    சலிப்புடன்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:55 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    உடலுக்குப் பணியில்லாவிட்டால்
    மனம் தறிகெட்டு ஓடும் என்பதை
    அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
    கனவுகள் முழுதும் விளங்காதவைகள் தான்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:54 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    1
    Uploads
    0
    மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???

    எனக்கு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தான் கனவுகள் வந்துள்ளன. :(

    அன்புடன்,
    மைதிலி
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:55 AM.

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???
    கனவுகள் மூளையில் பதிக்கப்பட்ட பதிவுகளின் விளையாட்டு என்று மருத்துவர்களின் கட்டுரையில்
    படித்திருக்கிறேன் மைதிலி. கனவுகளுக்கு பலன்கள் உண்டென்றும் கேள்விப்பட்டதுண்டு.
    சில சமயங்களில் விரும்பத்தகாத கனவுகளைக் கண்டு பயந்தும் இருக்கிறேன்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:55 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கனவுகளின் கவிதையில் நண்பனின் மனம் சிறகடித்து பறக்கிறது. நல்ல கவிதை

    அன்புடன்
    மன்மதன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:56 AM.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டாலும்,
    மனம் எப்போதும் உற்சாகமாய் புதிய தேடலுடன்.
    ஒன்றிருக்க இன்னொறை நாடுவது தான் மனித மனமோ..!
    எண்ண ஓட்டத்தின் அழகான விளிப்பாடு நண்பா..!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:56 AM.
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கவிதை வாசித்து கருத்துச் சொன்ன கவிதா, மைதிலி, மன்மதன், மதன் - நன்றி.

    மன்மதன் - மது (மதன் - இருவரும் ஒருவரோ...?)

    மனிதனுக்கு இது போன்ற விசித்திர கனவுகள் கூட வருமா என்ன???
    அட, இதென்ன பிரமாதம் - இதை விட பிரமாதமான, அடாவடியான, பயங்கரமான கனவுகள் எல்லாம் வரும்.

    ஆனால், என்ன ஒன்று - இந்த கவிதை கனவல்ல.

    ஒரு நுட்பமான விஷயம் - தாம்பத்ய உறவில், ஏற்படும் சலனங்களைப் பற்றி எழுதி இருந்தேன். தலைப்பு கவர்ச்சியாக இருந்ததாலும், கனவு என்ற சொல் இருந்ததாலும் கனவு என்றே கருதி விட்டீர்கள் போலிருக்கிறது.

    இதற்கு மேல் இந்த கவிதையின் பொருளை விளக்க முடியாது. அல்லது பண்பட்டவர் பகுதிக்கு மாற்ற வேண்டி இருக்கும்.....
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:56 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:57 AM.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!
    பாவங்க விட்டுடுங்க பாரதி. அது சரி எந்த வீட்டுல....!!!!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:58 AM.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0

    Re: ɢ......

    [quote][size=24][fade:583e6b6353][scroll:583e6b6353][highlight=red:583e6b6353]கனவுக் கன்னி...[/highlight:583e6b6353][/scroll:583e6b6353][/fade:583e6b6353]

    சூன்யத்தில் சிக்கிய
    ஒரு நாளில்
    பணியேதுமின்றி
    கிடக்கிறது உடல்.

    ஓய்வெடுக்கப் பணித்தால்
    உடல் பிரிந்து
    மனம்
    தறிகெட்டு ஓடுகிறது -
    கருப்பும் வெளுப்புமான
    சிறகுகள் முளைத்த
    குதிரையில்...

    பறப்பதே பிறப்பாய்
    காற்றைத் துளைந்து
    எல்லைகள் கடந்து
    கால் பதித்த இடத்தில்
    ஆடைகளே சுமையாய்
    ஏதோ ஒரு பெண்...

    முகம்
    ஏறிட்டு நோக்கினால்
    வட்டம் இருக்கிறது -
    கண், மூக்கு, காதின்றி.

    அன்றைய தேவையாக
    அவள் மட்டுமென
    குனிந்து
    முத்தமிட்டு முகர்கையிலே
    மனம் பதிக்கிறது
    கண், மூக்கு, காதுகளை
    அந்த வெற்று வட்டத்தில்.

    உறவை முடித்து
    மீண்டும் முகம் நோக்கினால்
    அதே
    வெற்று வட்டம்.


    வட்டம் இருந்த இடத்தில் வேறு என்ன நண்பரே எதிர் பார்த்தீர்?

    தட்டி எழுப்பி
    காப்பி தரும்
    மனையாட்டியின்
    வட்ட முகத்தில்
    கண், மூக்கு, வாய்
    இருக்கிறது -
    மனம் வடித்த
    இடங்கள் பிசகி...

    இடம் மாறினது ஒரு பிரசினையா உங்களுக்கு

    திரும்ப வந்து
    உடலோடு
    ஒட்டிக் கொள்கிறது
    மனம் -
    பறந்து திரிந்த
    சலிப்புடன்

    கடைசியில் மிஞ்சியது அதுதானா?

    மிகவும் ஏகாந்த சூழலில் இருந்து எழுதியுள்ளீர். நன்றாக இருந்தது. கொஞ்சம் குசும்பு செய்வோமே என்று தான் ஆங்காங்கே......
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:58 AM.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நண்பரே.... வீட்டில் சொல்ல வேண்டும் போல இருக்கிறதே...!
    வீட்டிலே, இதெல்லாம் தெரியும்ங்க....

    வீட்டிலே தெரியப் படுத்த கூடாத அளவிற்கு எந்த காரியத்திலும் ஈடுபடுவதில்லைங்க....
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:59 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் ஏகாந்த சூழலில் இருந்து எழுதியுள்ளீர். நன்றாக இருந்தது. கொஞ்சம் குசும்பு செய்வோமே என்று தான் ஆங்காங்கே......
    குசும்பு நன்றாகத் தானிருக்கிறது...

    இப்போதைக்கு எப்பவுமே ஏகாந்த சூழல் தான்...

    நன்றி, பாரதி, இளந்தமிழ்செல்வன்....
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-05-2008 at 02:59 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •