Results 1 to 12 of 12

Thread: திருப்பிக்கொடு!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    திருப்பிக்கொடு!!

    என் மனதினைப் பிசையும் மழலைச்செல்வங்களுக்கு சமர்ப்பணம்.

    காக்காய்க் கடி கடித்து
    காயா பழமா விட்டு
    சாதிசாக்கடைகளுக்கு அணைக்கட்டாய்...
    நாளைய சமுதாயத்திற்கு படிக்கட்டாய்..

    கோர்த்துக்கொண்ட விரல்கள்
    வளமான இந்தியாவின் வரைபடம்
    வடித்துக்காட்டிய சிற்பிகளாய்....

    வந்ததோ சோதனைக்காலம்...
    கோலங்கள் பூர்த்தியாகும்முன்னே
    புள்ளிகள் கலைந்த கொடூரம்..

    ஊதாங்குழலில் சுவாசத்தை
    தொலைக்கும் அம்மா...சமையற்கூடத்தில்...
    வண்ணமயமான வாழ்க்கையை
    எதிர்நோக்கும் அப்பா சாயப்பட்டறையில்...

    தினப்படிக்கு அகவிலைப்படி ஏறாதாவென்ற
    ஏக்கத்தில்...
    வயிறுநிறைய வறட்சிகுறையாதாவென்ற
    துக்கத்தில்..

    இத்துணை துயரிலும்
    தூணாக நிற்பாரென்றே
    உன்னை துணையாக்கி
    தலைவாரி பூச்சூடி பாடசாலைக்கு...
    என்ன பிழைகண்டாய்...
    ஏனப்பா பாடைசாலையாக்கி
    எமையெல்லாம் சிலையாக்கினாய்?!

    கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
    சலங்கையொலி கேட்கவிருந்த
    செவிகளில் சங்கொலி...

    இறைவா...
    எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
    இசைத்திருக்கலாம் இந்த முகாரி ராகங்களை...

    நஞ்சுகலக்காத மனங்கள்...
    நாளைய விடியலைத்தேடுகையில்
    இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!

    கருவறை பிரவேசத்தில்
    மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
    இந்த கல்லறை பயணத்தில்
    பிணவறை செல்ல துடித்திடும்
    எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!


    இறைவா திருப்பிக்கொடு...

    தேசத்தின் களைகளை
    கலையவந்த எம் கருவிகளை....

    நாளைய இருளுக்கு
    விளக்கான எம் விடிவெள்ளிகளை...

    சிறகுவிரிக்க காத்திருந்த
    வண்ணத்துப்பூச்சிகளை....

    மலர்வதற்குள் பறித்துச்சென்ற
    எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...

    திருப்பிக்கொடு...

    வேண்டுமெனில்
    ஈடாக எனைத்தருகிறேன்...
    இணையில்லா செல்வங்களை திருப்பிக்கொடுத்துவிடு....

    இருந்தபடி இறந்துகொண்டிருக்க
    விருப்பமில்லையெனக்கு!!!
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:44 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    என்ன ஒரு உணர்ச்சிகரமான பாடல்......இல்லை இல்லை உன் மனதில் ஓடும் எண்ணங்கள். அதை வார்த்திகளாய் நீ பரிமாறிய விதம்....கண்ணிலே நீரை வரவழைக்கிறது. இதயம் கனமாகிவிட்டது.........பூ.......உன்னிடம் ஒளிந்துள்ள கவிதை பசியை போக்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிதான் நடக்க வேண்டுமா.......
    உருக்கத்துடன்
    மணியா.............
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:45 AM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    இரண்டு சொட்டு கண்ணிர்
    கருகி போன இந்த மலர்களுக்கு
    அஞசலியாக அதோடு
    மறுபடியும்
    இதே இரண்டு சொட்டு கண்ணிர்
    வராமல் தடுக்க
    உங்கள் இறப்பு
    பாடமாக எங்களுக்கு உணர்த்த

    கவனமுடன் தவறுகள் நடக்கா
    வண்ணம் காக்க
    செய்திடுவோம் நாளை

    கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்.


    மனோ.ஜி
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:45 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சொல்ல வார்த்தை இல்லை.. கனத்த மனத்துடன் படிக்கிறேன்.. வெறும் கவிதையாக தெரியவில்லை.. உள்ளக்குமுறல்.. அனைவரும் வெறுமனே படித்து முடித்துவிட்ட செய்தி.. இன்று பூவின் மனதில் கிளம்பிய பிராத்தனை பொறி..எல்லோர் மனதிலும் பரவ... மணியா சொன்னது போல பூவின் கவிதை பசிக்கு இது தானா நடந்திருக்க வேண்டும்..

    ஆழ்ந்த அனுதாபத்துடன்
    மன்மதன்
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:46 AM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:47 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பார்க்கவும் முடியவில்லை...படிக்கவும் முடியவில்லை...
    வாழ்க்கை இவ்வளவுதானா...?
    என்ன கொடுமை...
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:47 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்த வாழ்க்கைதனை
    என்ன சொல்ல.....

    ஏங்கி தவிக்கும்
    பெற்றோருக்கு
    என்ன வார்த்தை...
    சொல்லி தேற்றுவது.....

    செய்தியை படிக்க படிக்க..... நெஞ்சம் தவிக்கிறது.....

    உணர்ச்சிக்குவியலுக்கு நன்றி.. பூ
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:47 AM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மிக மிக சோகமான நிகழ்வு... மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். அந்த குருவாகக் கருதப்படும் ஆசிரியர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள் - தப்பியோடுவதில். அதுவும் யாரும் அசையக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டு. அதை மீற நினைக்காதா - ஆசிரியரின் வார்த்தையே - கட்டளையே தேவ வாக்காக கருதிய குழந்தைகள் - கொடூர மரணத்தை சந்தித்திருக்கின்றனர். பல கேள்விகளை எழுப்பும் சம்பவம்.

    ஆசிரியர்களாக யார் வேண்டுமானாலும் வந்துவிட முடியுமா? ஏதோ ஒரு வேலை என்ற அளவில் தான் இந்தப் பணிக்கு வரவேண்டுமா? ஏணியாக நாங்கள் இருக்கிறோம் என்று பல சமயங்களில் சொன்னாலும் - இன்று அதே ஏணிகள் வழியாக புதைகுழிக்குள்ளும் இறக்கி விட முடியும் என்று நிரூபித்து விட்டார்கள்.

    சங்கம் வைத்து தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர் இயக்கங்கள் சிறிது நேரம் தன் உறுப்பினர்களிடம் மன வலிமையும், தியாக மனப்பான்மையும் தோற்றுவிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டால் நலம் என்றே நினைக்கிறேன்....

    நடந்துவிட்ட இந்த சோகத்தில் - ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு இருப்பதாகவே கருதுகிறேன்....
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:48 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    இளம் புயல்
    Join Date
    02 Sep 2003
    Location
    துபாய்
    Posts
    229
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    முதலில் கோடிகளை வாங்கிக்கொண்டு கூரைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கொடுத்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் செருப்பாலடிக்கனும். ஏதாவது நடந்தபின்தான் முடிவெடுக்கும் வெட்கங்ககெட்ட இந்தியாவில் பிறந்ததற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

    நாளையும் மறுதினமும் இதற்கான இரங்கல் கூட்டம் நடத்தவுள்ளோம் முடிந்தால் கலந்துக்கொள்க

    தொடர்புகளுக்கு---
    அசன் பசர் 050 5823764
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:48 AM.

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    - ஆசிரியரின் வார்த்தையே - கட்டளையே தேவ வாக்காக கருதிய குழந்தைகள் - கொடூர மரணத்தை சந்தித்திருக்கின்றனர்
    கீழ்படிதலின் கீழே புதைக்கப்பட்ட உண்மை..
    கண்ணீர் கரையடைங்காத சோகம்!
    தாயின் மடியைச்சுண்ட செய்த அகோரம்!
    அத்தனையும் பெண்பிள்ளைகள் என்பது அதைவிட கொடூரம்!

    இதற்கு அரச மரத்தடிக் கல்வி எவ்வளவோ மேல்!
    பணம் வசூலித்தும் இப்படி பாடாய் படுத்தவேண்டுமா?
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:48 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    என் பூ
    மீண்டும் நெஞ்சம் கணக்கிறது
    உம் கவிதையால்.

    தொடரட்டும்
    உம் கவிதை ஆர்வம் (மட்டும்)
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:49 AM.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    என் இனிய பூ...
    நெஞ்சம் கனக்கிறது, அந்த சோகச் சம்பவத்தை நினைக்கும்போதும், உன் கவிதையை படிக்கும்போதும்...
    Last edited by அமரன்; 20-07-2008 at 10:49 AM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •