என் கணிணியின்
இயக்கங்களை சாத்தான்கள்
தின்ற சவப்பொழுதில்
நண்பனின் குருதி வழிந்தோடுகிறது..
குருதி எடுத்து
உடலெங்கும்
பூசிக்கொள்ள முடியாதபடி
என் கைகள் ரணப்பட்டு
இருப்பது கண்டு
கவலை கொள்கிறேன்..
மாடத்திலிருந்து
சவமாய் நின்று
வேடிக்கை மட்டுமே..
சாத்தான்களை
துவசம் செய்துவிட்டு
குருதி அள்ளிப் பூசுவேன்
கடிகாரம் வழியே வழிந்தோடும்
என் உயிர் உருகுவதற்குள்
திரும்பி வருவேன்..
அந்த பிண நிமிடங்கள்
கண்டு பொறுக்கவும்..
Bookmarks