இன்பம்
அதில் கொஞ்சம்
பூசினாற்போல் துன்பம்...
அமுதம்
அதோடு தொட்டுக் கொள்ள
ஆலாலம்
சிந்து
அவ்வப்பொழுது அவசியமாய்
முகாரி...
நல்ல உணவு
உணவின் அருமை தெரிய
அவ்வப்பொழுது பட்டினி...
இப்படி ஒரு சமச்சீரான
வாழ்க்கையைத்தான் வரமாக
கேட்க வந்தேன்...
ஒரே வரத்தில்
அத்தனையும் தருகிறேன்
என்று கூறி
காதலை அல்லவா என்மீது
விட்டெறிந்துவிட்டாய்......
Bookmarks