அம்மா...
ஓடிவராதே..
சிவந்த கன்னங்களை கணக்கெடுக்க.
அங்கே பார் அந்த சிந்திக்காரன்
கணக்கில் பாக்கி வைத்துப் போகிறான்...
உன் சமையல்
பலமாம் பல நளமகா ராஜர்கள்
பூரித்துப் போகிறார்கள்..
தமயந்திகளை ஏப்பம் விட்டபடி..
உன் படையல்
பல பிரம்மாக்களுக்குத்தான் விருந்தாகின்றன..
அந்த பிரம்மாக்கள் கருத்தடை
முறையாய் போட்டிருக்கிறார்களாவென
நுழைந்து பாரம்மா நுழைவறையிலே நிறுத்தி..
நீதான் எனக்கு பாலூட்டினாய்..
விபச்சாரத் தொட்டிலில்
வறுமையில் நீ இட்டாலும்
தாய்க்கே பாலூட்டும்
என் பாக்கியம் கண்டு
வெட்கங்கள் விலகிப் போகின்றன
அம்மா..
ஏனம்மா ..நான் வெட்கங்கெட்ட மகளென
எவரேனும் சொல்வார்களா இனியும்?!!
Bookmarks