Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: புதிதாய் பிறந்த கவிதை...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    புதிதாய் பிறந்த கவிதை...

    புதிதாய் பிறந்த கவிதை...


    சுழன்றடித்த காற்றின் வேகம்
    மனம் புகுந்து
    சூன்யமாக்கிப் போனது.

    இறுகிய கடல் விரட்டிய
    வெளிச்சத்தில்
    மீந்த இருட்டுக் கரைசல்
    சூன்யம் நிறைத்தது.

    விரட்டிய அலை நீரோட்டத்தில்
    வெறுமை நிறைந்த
    காலிப்பானையாய் மிதந்து போனது
    எஞ்சிய கனவுகளும்.

    கரைந்து விழுந்த மண்சுவரில்
    அமுங்கிப் போனது
    கனவுகள் சமைக்கும் அடுப்பும்.

    அனைத்துமிழந்த அகதியாய்,
    வானிலிருந்து வீழும்
    உணவுப்பொட்டலம் தேடி
    அலைச்சல்.

    கரைமீறி பனைதொட்டு ஓடும்
    வெள்ளத்தில் நீர் தேடும் தாகம்

    புணர்வாழ்வு மையத்தில்
    வாழ்ந்த வாழ்வின்
    அடையாளம் அறியாத
    அவமானங்கள்...

    மீண்டும் வாழ்ந்துகாட்டும் வெறியில்
    அனைத்து திசுக்களிலும் அவஸ்தையாய்
    அலம்பிக் கொண்டிருக்கிறது -
    சுயமாய் சமைத்து
    பசியாறத் துடிக்கும் வாழ்க்கை....
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:37 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    இனியவர்
    Join Date
    24 Jan 2004
    Posts
    506
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மீண்டும் வாழ்ந்துகாட்டும் வெறியில்
    அனைத்து திசுக்களிலும் அவஸ்தையாய்
    அலம்பிக் கொண்டிருக்கிறது -
    சுயமாய் சமைத்து
    பசியாறத் துடிக்கும் கவிதை....

    வார்த்தையாய் வெளிப்படுத்திய விதம் அருமை...
    வாழ்த்துக்கள்...


    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:37 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி தாமரை... இந்த நள்ளிரவில் யார் இருப்பார்கள் படிக்க என்று எண்ணிக் கொண்டே, கடைசியாய் ஒரு வலம் வந்துவிடலாமே என்று பார்த்த பொழுது... உங்கள் பதிவு.... நன்றி....
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:37 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    புணர்வாழ்வு மையத்தில்
    வாழ்ந்த வாழ்வின்
    அடையாளம் அறியாத
    அவமானங்கள்...
    :?:
    என்றால் என்ன நண்பரே?
    இன்று இதே போல் நானும் ஒரு கவிதை குறித்த கவிதை எடுத்துவர.. என்னே வியப்பு! கொஞ்சம் வேலை பளு பிறகு அதை வெளியிடுகிறேன்.
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:38 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #5
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    அருமை நண்பரே.
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:38 PM.

  6. #6
    இளம் புயல்
    Join Date
    13 Jan 2004
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    8,964
    Downloads
    0
    Uploads
    0
    அழகிய வெளிபாடு.. அருமை நண்பரே
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:38 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமையான வரிகள்.. நண்பனே... வாழ்த்துக்கள்.. இன்னும் தொடரவும்
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:39 PM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி நண்பர்கள் - கவிதா, தஞ்சைத் தமிழன், சமுத்திரா, அறிஞர் அவர்களுக்கு....

    புணர்வாழ்வு மையத்தில்
    வாழ்ந்த வாழ்வின்
    அடையாளம் அறியாத
    அவமானங்கள்...
    அரசின் தயவில் உண்ணவும், உடுக்கவும் என்ற நிலை வந்தால் தெரியும், அதன் ஊழியர்களிடம் எத்தனை அவமானப் படவேண்டும் என்று... மனிதனின் அருமை எந்திரங்களுக்குப் புரிவதில்லையே...
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:39 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நல்ல கவிதை நண்பரே! நீண்ட நாட்களுக்குப் பின்பு வந்து பதித்த கவிதைகள் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    மனிதனை மனிதன் அவமானப்படுத்தும் பகுதிகள் நிறையவே, அதில் ஒன்று புணர்வாழ்வு மையம். இல்லை என்று வந்த மனிதனிடமே எதிர்பார்த்து கையேந்து கயவர்கள் நிறைந்த உலகமாற்றே, எப்படி மாற்றுவது?
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:39 PM.
    பரஞ்சோதி


  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சுதந்தரம்...
    இல்லாதபோது மட்டுமே
    உணரப்படும்...


    அருகில் இருந்து பார்த்த அனுபவம்
    உங்கள் வரிகளைப் படித்ததும்...

    சொல்லாட்சி உங்கள் சிறப்புரிமை நண்பன்..
    பாராட்டும் வாழ்த்தும்...


    தொடரட்டும்...

    எழுதுவது போதை என்பீர்கள்..
    உங்களுக்குத் தெளியவேக் கூடாது என்று வேண்டும்
    கூட்டத்துக்கு நான் தலைவன்...
    Last edited by பென்ஸ்; 22-05-2007 at 05:40 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஒவ்வொரு முறையும் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பதை கண்டுகொள்ள, திரும்ப திரும்ப படித்து கடைசியில் (ஓரளவுக்கு) அனுமானிக்கும் போது கொஞ்சம் மனதில் மகிழ்ச்சியும், பின் கவிதையின் கனத்தில் மனம் கொஞ்சம் சங்கடப்படவே செய்கிறது நண்பரே.
    Last edited by பென்ஸ்; 23-05-2007 at 06:24 PM.

  12. #12
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    எழுதுவது போதை என்பீர்கள்..
    உங்களுக்குத் தெளியவேக் கூடாது என்று வேண்டும்
    கூட்டத்துக்கு நான் தலைவன்...
    நான் கொ.ப.செ!
    விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே!
    Last edited by பென்ஸ்; 23-05-2007 at 06:26 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •