நேற்றிரவு
நேற்றிரவு
எங்கிருந்தேனென்று
யாருக்குத் தெரியும்?
இருண்ட இரவில்
தூக்கமென்ற மரணம்
என்னைத்
தூக்கிச் சென்றிருக்கலாம்.
மதுக்கடலின் ஆழத்தில்
முங்கிப் போயிருக்கலாம்.
ஏதாவது ஒரு பயணத்தில்
இனம் புரியாத கூவல்களிடையே
சன்னல்களைச் சாத்திக் கொண்டு
புத்தகம் படித்திருக்கலாம்.
தூரத்தே தெரியும் சன்னலின்
விளக்கொலியில்
நகரும் ஆண்பெண் நிழல்கள்
என்ன செய்யப் போகின்றன
என்று நேரம் போக்கியிருக்கலாம்.
எது எப்படியிருந்தால் என்ன?
வரும் இன்றைய இரவில்
என்ன செய்வேனென்ற
கவலை இல்லாத பொழுது
நேற்றைய இரவு
ஏன் என்னை இம்சிக்கிறது....?
Bookmarks