Results 1 to 8 of 8

Thread: வரமாய் வந்தவளே!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    வரமாய் வந்தவளே!!

    அங்குமிங்குமாய்
    அலைந்துகொண்டிருந்தென்னை
    அடைத்துவைத்தாய்..
    அடைகாத்த சுகத்தை அனுபவிக்கவைத்தாய்..

    பாசப்போர்வைக்குள் சுருட்டிக்கொண்டு
    உன் சுவாசத்தில் வாசம்பிடிக்கச்செய்து
    உண்மை உறக்கத்தை வரவழைத்தாய்..

    ப்ரியங்களை பரிமாற
    மொழியேதுமில்லையென
    உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..

    சிரிப்பும்-அழுகையும்
    எதிரும்-புதிருமல்லவென உறைக்கச்செய்தாய்..

    ஸ்பரிசங்களை
    சுவாசிக்க கற்றுக்கொடுத்தாய்...
    பேதமில்லா நேசத்தை போதித்தாய்..

    உன் புரியாத மொழிகளை
    காற்றில் வடித்துவைக்கும்
    கவிதைகளாய் கற்பனையில் சிலிர்க்கச்செய்தாய்..

    அந்திநேர அமைதியில்...தென்றலின் தழுவலில்..
    உன் கவிதைவரிகள் ஞாபகக்குளத்தில்
    வளையங்களாய் வலம்வருவதையெண்ணி
    வசந்தமே உன் பெயர் குழந்தை-யாவென
    கூச்சலிட்டு......
    கீச்சென.. என்னை கிண்டலடித்து
    பறந்துபோகும் மாலைப்பறவைகளை
    மனதினுள் ரசித்தபடி...

    உன்னை மடிதனில் சுகமாய் படுக்கவைக்க...
    உன் விரல்தனில் செல்லமாய் சொடுக்கெடுக்க...
    உன் பாதங்களில் இதமாய் இதழ்பதிக்க...

    இல்லம் விரைகிறேன்.. மீண்டும்..மீண்டும்..

    வேதனைப்புயலில் சுழல்கையில்
    உன் வெட்கப்புன்னகை வழியே
    வேண்டிய வரத்தை அளித்த ஆண்டவனை
    மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்..
    புதையலேதும் வேண்டாம்.. இப்புன்னகைவிடுத்தென..
    மீண்டும் ...மீண்டும்..

    எனதருமை மகளே..
    உனக்காகவே உயிர்வாழ்கிறேன்...

    உன்னை ஈன்றவளும்
    எனக்குள் புதைந்து இதுபோல்
    புலம்புவதை புரிகிறாய்தானே?!!
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:23 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    பூ ...
    அசத்தல் ... அருமை ..
    யதார்த்தத்தில் , உணர்வுகளில் நனைந்து
    வெளியே வரும் வார்த்தைகளின் வலிமை இதுதான் ...
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:24 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    இப்பவும் அலையலாம். ஆனால் ஒன்று.
    அவரையும் தூக்கிக் கொண்டு. போங்கள்.
    எல்லா இடமும் எடுத்துச் செல்லுங்கள்.
    எல்லாவற்றையும் சொல்லித் தாருங்கள்.
    கவிதைக்குப் பாராட்டுக்கள்.
    -அன்புடன் அண்ணா.
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:24 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    ப்ரியங்களை பரிமாற
    மொழியேதுமில்லையென
    உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..
    அருமையான வரிகள்......

    கடைசி வரியில் கலங்கடித்து விட்டீர்கள்....

    ஆனாலும், நீண்ட நெடிய இடைவெளிக்கு அப்புறம் வந்து கவிதை தந்தமைக்கு நன்றி.....
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:26 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வரம் பெற்ற, வரம் தந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சரமாய் கோர்த்திருக்கும் பூவிற்கு பாராட்டுக்கள்.
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:27 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    உணர்வுகளை,உண்மைகளை அழகாய் பதியவைத்த என் இனிய பூ...
    தொண்டை அடைத்துக்கொள்கிறது மறுபடி வாசித்தால்...
    துடுப்பற்ற கலமாய் எங்கோ அலைந்துகொண்டிருக்கும் மனதில் எண்ணக் குவியலை வலைவீசி பிடிக்கும் அந்த பிஞ்சுப் புன்னகையில் ஒரு புது உலகம், புது ஒளி, புது நம்பிக்கை பிறக்கத்தான் செய்கிறது...
    தந்தையாய் நின்று கண்கள் பனிக்கிறேன்...
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:27 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நிதர்சன உண்மையின் மறுபதிவு உங்கள் கவிதை.. அற்புதம்.
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:28 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாசச்சங்கிலியின் முன்னோக்கிய கணு
    பலமான பிணைப்பு...
    இயற்கையின் அமைப்பு..

    படைத்த விதம் அருமை பூ

    அப்பாவாகிட்ட ஒரு மகன் சொன்னது இது----

    முன்பெல்லாம் தொலைபேசுவது
    அம்மா பொழியும் பாசம் கேட்க
    இப்போதோ
    அவர்கள் பேத்தி புராணம் பாடக் கேட்க.
    Last edited by பூமகள்; 17-07-2008 at 06:29 PM. Reason: ஒருங்குறியாக்கம் - பூமகள்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •