என் பிணமும் கனவுகளும்...
இடுகாட்டில் என் பிணம்
எரிந்து கொண்டிருக்கிறது...
வெந்த சதைகளை
பக்குவம் பார்த்து
நான்
ருசி பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
வலையில் ஊஞ்சலாடிக் கொண்டே
நான் இந்தக் காட்சியை காண்கிறேன்....
கணிணியின் இயக்கங்களை
செயல் புரிய வைக்கும்
மந்திரங்களை தொலைத்த
ஒரு சவப் பொழுதின் இரவில்
நான் கனவு காண்கிறேன்....
இப்படியாக
அந்தக் கனவு
நீட்டித்து
என் மாம்சங்களை
கூறு போட ஆரம்பித்த நேரத்தில்....
(மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்க)
Bookmarks