பிரபலங்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்நாமே ஒரு பிரபலம்தான்..இருந்தாலும் நம்ம மன்றத்தினருக்காக நம் வாழ்க்கையில் சந்தித்த பிரபலங்களையும் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே..
பல வருடங்களுக்கு முன் நடந்தது இது..
வடகரையில் இருந்த ஒரு குடும்ப நண்பர் திருமணத்திற்கு எங்க குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம். அப்ப எனக்கு 10 வயதுதான்.. அந்த திருமணத்திற்கு பாடகர் மனோ அவர்கள் அவர் குழுவினருடன் கச்சேரி பண்ணுவதற்கு வந்திருந்தார். அப்போ அவர் நல்ல புகழ்ழில் இருந்தார்..அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.. அவர்களை யாரும் தொந்தரவு செய்யவேணாம் என்று சொல்லிவிட்டனர்.
சினிமாவில் பாட்டு பாடற மனோ வந்திருக்கிறார். போய் ஆட்டொகிராப் வாங்கி வா என்று என் அண்ணன் என்னிடம் சொன்னான். சரி என்று நான் நேராக அந்த அறைக்கு சென்று அங்கே இருந்த ஒருவரிடம் ஆட்டொ கிராப் கேட்டேன். அவர் ஏன் என்னிடம் கேட்கிறாய் அதோ மனோ இருக்கிறார் அவரிடம் கேள் என்றார். நானும் அவரிடம் சென்றேன் . அவர் ஆட்டொகிராப் போட்டுவிட்டு அப்புறம் ' தம்பி நான் உண்மையில் மனோ கிடையாது , அதோ இருக்கிறாரே அவர்தான் மனோ..' என்று இன்னொருத்தரிடம் அனுப்பினார்.. இப்படியே எல்லொரிடமும் ஆட்டொகிராப் வாங்கி வந்து கடைசியில் நான் முதலில் கேட்டவரிடம் வந்து இதில் யார்தான் மனோ என்று கேட்டேன்.. எல்லோரும் பயங்கரமாக சிரித்து விட்டனர். நான் முதலும் கடைசியிலும் கேட்டதுதான் மனோ.. நம்மிடம் யார்தான் ஆட்டொகிராப் கேட்க போகிறார்கள் என எல்லோரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டனர்.. கடைசியா மனோ சொன்னார்.. என்னை அடையாளம் தெரியாமலேயே ஆட்டொகிராப் கேட்கிறியா என்று.. நான் சொன்னேன்..'அட உங்க ஆட்டொகிராப் யாருக்கு வேணும், என் அண்ணந்தான் அனுப்பிவச்சான்னு'
அப்ப உனக்கு என்னை பிடிக்காதான்னு கேட்டார்.
உங்க பாடல் பிடிக்ககும்னேன்..
பக்கத்தில் இருந்த புகைப்படகாரரை கூப்பிட்டு என்னுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து கொடுத்தார்..'என்னை இனி எப்பவும் மறக்கமாட்டே'ன்னு சொன்னார்..
சிங்காரவேலன் படம் பார்த்துட்டு அவருக்கு போன் பண்ணி இனி எங்கே பார்த்தாலும் உங்களை அடையாளம் கண்டு பிடித்துடுவேன்னு (முன்னாடி நடந்த சம்பவங்களை ஞாபகபடுத்தி விட்டுத்தான்) சொன்னேன்.. ஒரே சிரிப்புதான் போங்க..
Bookmarks