Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: கைகள்....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    கைகள்....

    மடங்கி விட்ட கைகள்..

    அத்தனை பேரையும்
    அணைத்து வளர்த்த கைகள்
    ஆறுதல் தந்து, ஆதுரம் தந்து
    அமைதி அளித்திட்ட கைகள்
    இல்லாதவன் வீடுதான்..
    இருந்தாலும்
    எப்படியோ உண்ண, உடுத்த , வளர்க்க
    ஏற்பாடு செய்திட்ட
    மந்திரமான கைகள்..


    ஓய்ந்துவிட்ட கைகள்...

    பஞ்ச காலங்களில்
    பைசாவுக்கு நாலு முந்திரி உடைத்து
    கருத்துப் போன கைகள்
    ஆற்றோர எருமுட்டை
    காட்டில் காய்ஞ்ச சுள்ளி
    பொறுக்கி காய்த்த கைகள்
    கரும்புச்சோலை அடுப்பின்
    சுவாலை தீய்த்த கைகள்

    சாய்ந்துவிட்ட கைகள்...

    கதிர் அறுவா பட்டு
    காயம்பட்ட கைகள்
    களை பறிப்பு, நாற்று நடவில்
    சேற்றுப்புண் பட்ட கைகள்
    அறுவடை போது
    கூர் சுனை குத்திய கைகள்
    தை பிறப்பு நாளில்
    பொங்கல் ஊட்டிய கைகள்

    காய்ந்துவிட்ட கைகள்...

    மத்தியான பசி ஆட்களுக்கு
    மொத்தை சோறு இட்ட கைகள்
    கூடத்து கோழிக்கு
    குருணை அள்ளி விசிறிய கைகள்
    ஆயி கழுவிவிட்ட கைகள்
    ஆனை கட்டி ஆட்டிய கைகள்

    இன்று

    மடங்கி விட்ட கைகள்..
    ஓய்ந்துவிட்ட கைகள்...
    சாய்ந்துவிட்ட கைகள்...
    ஓய்ந்துவிட்ட கைகள்...
    சலனமற்ற கைகள்.....

    என் வெப்பக்கண்ணீரை வாங்கி
    தலை புதைத்த என் மீது
    ஆசிப் பன்னீராய்
    வார்க்கும் கைகள்...
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:41 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    நன்றி நண்பரே
    பெற்றோரை வளர்த்தோரை நினைத்து பார்த்து
    நம்மை வளர்க்க அவர்கள் பட்ட
    கஷ்டங்களை மனக்கண் முன் வைத்த
    கவிதை


    வாழ்த்துக்கள்

    மனோ.ஜி
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:42 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    இளம் புயல்
    Join Date
    13 Jan 2004
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    8,964
    Downloads
    0
    Uploads
    0
    பிறக்கும் போது நம்மை
    இறுக அணைத்த கைகள்
    தொப்புள் கொடி அறுத்ததும்
    மறந்திடுவார் பலர்
    ஓய்ந்த போதும் மறக்காது
    அன்னையின் கைகள்

    மனதை நெகிழ செய்யும் - அன்னைக்கு அஞ்சலி
    உள்ளம் நிறைந்தது ஆயினும் கனத்தது நண்பர் இளசு அவர்களே
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:42 AM.

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அவைகள் கைகள் அல்ல
    அட்சய பாத்திரம்.
    நெகிழ்ந்தது நெஞ்சம்..
    நன்றி ஐயா!
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:43 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சிரத்தையுடன் கைகளால் கருத்தெழுதிய நண்பர்களுக்கு
    என் நெஞ்சம் சொல்லும் நன்றி...
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:43 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அன்னையைப் போற்றுவதில் வஞ்சனை வைக்கவில்லை
    முடியவும் முடியாது.

    வாழ்த்துக்கள் இளவல்ஜி.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:43 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கைகள் முளைத்ததில் இருந்து கைகால் முடியாமல் போகும் வரை அன்னையின் அன்பு அளவிட முடியாததுதான். நன்றி அண்ணா.
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:43 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றிகள் அண்ணலுக்கும்.. தம்பி பாரதிக்கும்..
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:43 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    இளம் புயல்
    Join Date
    14 Nov 2003
    Location
    Singapore
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கைகளில்தான் எத்தனை விதம்?இன்பம்,துன்பம்,உவகை,ஆறுதல்,சலனம் என நிறையவாறாகப் படைத்தீர்கள்.மிகவும் நன்றி.
    அதுசரி பாஜகவினர் சண்டைக்கு வரமாட்டார்களே?
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:44 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி நண்பரே..

    ஆமாம்.. உங்க பேர் வெறும் மூர்த்தியா..கிருஷ்ணமூர்த்தியா?

    நல்ல நாள் உங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையா????
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:44 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    இளம் புயல்
    Join Date
    14 Nov 2003
    Location
    Singapore
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஏன் என்ன ஆயிற்று இளசு அண்ணா?

    நான் வெறும் மூர்த்திதான்.தேர்தல் கமிசனர் ஏதும் பிரச்சனை செய்தாரா?எனக்கு எல்லா நாளும் நல்ல நாளே...தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பிடிக்கும்.
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:45 AM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அண்மையில் பாராளுமன்ற வேட்பாளர் (வக்கீல்) ஒருவரின் அன்னை
    நாச்சம்மா அவர்களின் பேட்டி குமுதம் இதழில்...

    அவரும், கணவரும் படிப்பறிவில்லாத ஏழைகள்.. கூலிகள்..
    உள்ளூரிலும், பிழைக்கப்போன அண்ணன் ஊரிலும்
    பிள்ளைகளை ஆடுமேய்க்க கட்டாயப்படுத்தும் "ஆண்டைகள்"

    ஆண்டை வீட்டம்மா : என்ன வக்கீல், இஞ்சின்னியராவா ஆக்கப்போறே இவனுங்களை?

    நாச்சம்மா : ஆக்கிக்காட்டறேம்மா

    காலை நாலு முதல் எட்டுவரை பலர் வீட்டு வேலை..
    பின் வயலில் மாலை வரைக் கூலிவேலை..
    வீடுகளில் கிடைக்கும் மீந்த உணவு பிள்ளைகள் வயிற்றுக்கு
    ... சமையல் செலவை மிச்சப்படுத்தி.. சிலேட்டு -புத்தகம்..

    தமக்கென்று நல்ல துணி, வாய்ருசி, மூச்....
    வெளியூரில் கூலி அதிகமா..கணவனை அங்கே விரட்டி....

    இதோ இன்று ஒரு மகன் வக்கீல், அடுத்த மகன் இஞ்சினீயர்...


    அந்தத் தாயின் வைரம் பாய்ந்த நெஞ்சுக்கும் , காய்ப்பு காய்த்த கைகளுக்கும்
    இந்தக் கவிதை அர்ப்பணம்...

    நாச்சம்மாக்கள் இருக்கும்வரை
    மண்ணில் மனிதம் இருக்கும்...
    மனிதம் இருக்கும் இடத்தை
    தெய்வம் காக்கும்..
    Last edited by விகடன்; 04-08-2008 at 10:46 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •