Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: கவலைகள்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    கவலைகள்..

    என் ஆயுளை நானே
    கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
    ஒரு நாள்
    கிழிப்பதற்கு நாட்காட்டி இருக்கும்...
    நான் இருக்க மாட்டேன்...
    பின்பு நாட்காட்டியைக் கிழிப்பது யார்?
    இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...

    இந்த அழுக்கு பூமியைக் குளிப்பாட்ட வேண்டும்...
    அன்று மனிதர்களை எல்லாம்
    வானிற்கு அழித்துச்செல்லும்
    சுற்றுலா தினமாக்கிவிடுவேன்...
    அவர்கள் திரும்பி வரும் பொழுது
    பூமி பளிச்சென்று இருக்கும்..
    ஆனால், அவர்கள் சுற்றுலாவிற்கு வர மறுத்தால்?
    இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...

    பூக்களையும் பட்டாம்பூச்சிகளையும்
    அழைத்து விருந்து கொடுக்க வேண்டும்..
    நான் அவ்வப் பொழுது மகிழ்ச்சியாக
    இருப்பதற்கு துணை செய்வதால்...
    விருந்து பிடிக்கவில்லையென்றால்?
    இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...

    இப்படி என் கவலைகள்
    நீண்டு கொண்டே போவதால்
    ஒரு நாள் நான் கவலையை மறக்கவேண்டும்...
    அப்படி மறக்க முடியவில்லையென்றால்?
    இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:51 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    ராம்பால்,

    நன்றாக கவலைப்படுகிறீர்கள்.
    பாராட்டுக்குரிய அழகிய வரிகள்.

    ஆங்கில வார்த்தைகளை (கேலண்டர்)
    தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:51 AM.

  3. #3
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ராஜகுமாரன் அவர்களே..
    நாட்காட்டி என திருத்திவிட்டேன்...
    அடுத்த கவிதையில் இருந்து ஆங்கிலம் கலக்காமல் பார்த்துக் கொள்கிறேன்..
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:51 AM.

  4. #4
    இளையவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    70
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எப்போதும் கவலைப் படும் ஒருவரின் எதிரே ஒருநாள் கடவுள் தோன்றி அவருடைய ஒவ்வொரு கவலைகளையும் கேட்டு தீர்த்து வைத்தாராம். கடைசியில் ஒரு கவலையைக் கேட்டு கடவுளே திகைத்து போனாராம். அது, ''எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டால் எதை நினைத்து கவலைப் படுவது" என்பதாம்.
    நண்பரின் கவலை அப்படித்தானோ?----நல்ல கவிதை: வாழ்த்துக்கள்.


    ---பொன்னியின் செல்வன்
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:51 AM.

  5. #5
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பரின் கவலைகள் மிக மென்மையான கவிதை.... தலைவரின் அங்கீகாரமும்
    பொன்னியின் செல்வனின் கருத்தும் கவிதையை மேலும் அழகாய் காட்டுகிறது
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:51 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ராம்பால் அவர்களே, இப்படி எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டால் என்ன செய்வது. வாழ்க்கையே இப்படியென்றால் .............. கொஞ்சம் கஷ்டம்தான். என்னையும் கவலைப்பட வைத்துவிட்டது.

    கவிதை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:52 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கவலை மறக்க கவிதை உண்டு
    கவிதை பதிக்க மன்றம் உண்டு
    படித்து ரசிக்க நண்பர் உண்டு
    பறக்கும் கவலை உன்னைக் கண்டு....
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:52 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    நன்றாக கவலைப்படுகிறீர்கள்.
    பாராட்டுக்குரிய அழகிய வரிகள்.
    அவர் நன்றாக கவலைப்படுவதால் தான் நன்றாக கவிதையும் வருகிறது
    கவலைதீர்ந்துவிட்டால் கவியூற்றும் வற்றிவிடுமாம்!!!!!! :lol: :lol:
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:52 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கவலைப்பட வேண்டும் -நன்றாக
    கவலையே நம்மைக் கண்டு
    கவலைப்பட வேண்டும்.....

    காதலிக்கும் காலத்தில்
    கல்யாணம் ஆகுமா என்ற கவலை.....

    கல்யாணம் ஆனபின்னே
    கல்வி கற்கும் குழந்தைகள்
    வேண்டுமென்ற கவலை......

    கற்று வரும் குழந்தைகளைக் கண்டு
    கல்வியை வாங்கித்
    தர முடியுமா என்ற கவலை.....

    கொடுத்த காசுக்கு
    கிடைத்த கல்விக்கு
    காசு பணம் சம்பாதிக்க
    வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை.......

    கற்ற குழந்தைக்கோ கவலை -
    காதலிக்க நான் அனுமதிப்பேனா என்ற கவலை......

    ஆஹா!!!

    கவலையிலே ஒரு காலச் சக்கரம்
    சுழன்று வந்து நின்றதே!!!

    இனி எனக்குக் கவலையில்லை -
    என் கவலைகளயும் சேர்த்து
    கவலைப்பட
    எனக்கொரு மகனுண்டு!!!
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:52 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  10. #10
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0

    இனி எனக்குக் கவலையில்லை -
    என் கவலைகளயும் சேர்த்து
    கவலைப்பட
    எனக்கொரு மகனுண்டு!!!
    அருமை நண்பன் அவர்களே .. நன்றி ..
    கவலைப்பட வைக்காத மகனிருந்தால் கவலையேது ... !
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:53 AM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நண்பன் வடித்த வாழ்க்கை வட்டம்...
    சிந்தனைச் சுழலை தூண்டி விட்டது....
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:53 AM.

  12. #12
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    எதிர்பார்க்கவில்லை..
    நீண்ட நாள் கழித்து இந்தக் கவிதைக்கு பதில் கவிதையை நண்பன்
    எழுதுவார் என்று...
    நன்றி நண்பன் அவர்களே...
    Last edited by விகடன்; 01-05-2008 at 10:53 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •