எங்கள்
மரத்துக் கனிகள்
எங்களுக்கே
சொந்தம் என்றோம்.
இதுவரை
கனிகளைப் பறித்த
நீங்கள்
இப்போது
மரத்தை
வேரோடு
வெட்டிச் சாய்த்தீர்கள்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்