ஒரு முறை
என்னைப் பார்த்துவிடு..
உன் பார்வையில் அடிக்கும்
அனலில்
என் இதயம் சுத்தமாகட்டும்...
ஒரு முறை
என்னுடன் பேசிவிடு..
உன் வார்த்தைகளில் இருக்கும்
கூர்மை
என் முகத்திரையை கிழிக்கட்டும்..
ஒருமுறை
என்னை அலட்சியப்படுத்து..
அந்த அலட்சியத்தில் இருக்கும்
எள்ளி நகையாடலில்
நான் இன்னொருமுறை உயிர்த்தெழ வேண்டும்..
நீ என்னை விட்டு
விலக விலகத்தான்
நான் என்னுள்
புதைந்து
முத்தெடுக்கிறேன்..
ஆகையால்,
மறுபடி என்னைப்
பார்க்கும் பொழுது
ஏதாகிலும் செய்துவிட்டுப் போ..
சும்மா வெறுமனே மட்டும்
போய்விடாதே..
அதுதான் என்னைக் கொல்லும்
விஷம்...
Bookmarks