படித்தவையா, நினைத்தவையா............
மனவறையில் தொகுக்கப்படாமல்
சிதறிக்கிடக்கும்....
உ தி ரி ப் பூ க் க ள்....
நின்றபின்னும் ஆக்கிரமிக்கும்
சில்வண்டின் பாட்டு போல..
சென்ற பின்னும்
சிந்தனையில் நீ..
****************************************
சற்றே திறந்த தெருஜன்னல் வழியே
வழிந்த பாடல் வரிபோல்
அவ்வப்போது உன் சாடைப் பேச்சுகள்..
ஒவ்வொரு வரியாய் என் சேமிப்பில்...
நம்பிக்கை இருக்கிறது
முழுப்பாடலும் வசப்படும் என்று..
************************************************
எவர் பேச்சுக்கும் நான் ஒலிநாடா
உன் பேச்சை சேமிப்பதில் எம்.பி.3!
***************************************************
நான் பாறைதான்
உன்னை
எதிரொலிப்பதால்
Bookmarks