நான்
அழாமல் இருப்பேன் அப்பா
அழுது கொண்டே
சொன்ன மகளின்
கண்ணீரைக் கண்ட
காதுகளுக்கு
கசிந்துருகி நன்றி சொன்னது
கண்கள்....
நான்
அழாமல் இருப்பேன் அப்பா
அழுது கொண்டே
சொன்ன மகளின்
கண்ணீரைக் கண்ட
காதுகளுக்கு
கசிந்துருகி நன்றி சொன்னது
கண்கள்....
Last edited by அமரன்; 10-11-2007 at 06:17 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
பெரிய அளவில் சாதனைகள்
எதுவுமில்லை -
என் பெயருடன்
ஒட்டிக் கொண்டு......
சுயசரிதை எழுத
என்ன இருக்கிறது என்னிடம்........?
இல்லாத பொழுது
இருக்கிறதைக் கொண்டு வாழ்ந்ததும்
இருக்கிற பொழுது
இல்லாதவருக்குக் கொடுத்து
வாழ்ந்ததையும் தவிர
வேறென்ன இருக்கிறது.....
சுயசரிதை எழுத......?
Last edited by அமரன்; 10-11-2007 at 06:18 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
புத்தகத்தின் முதல்
பக்கம் போல
மனம் காலியாகக் கிடக்கிறது.....
சிலருக்கு பெயர் எழுதி
உரிமை கொண்டாட....
சிலருக்கு தங்கள்
அன்பை நிலைநிறுத்தி
நினைவில் நீங்கா இடம்பெற....
சிலர் புத்தகங்களில்
அது என்றுமே காலியாக...
என் கவிதைகள்
எப்பொழுதும் போல்
இரண்டாம் பக்கட்திலிருந்து
ஆரம்பிக்கின்றன....
முதல் பக்கத்தைக் கடந்து
நீ
வந்துவிடும் பொழுது..........
Last edited by அமரன்; 10-11-2007 at 06:19 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
அருமை .. நண்பன் அவர்களே ..
தொடருங்கள் ...
Last edited by அமரன்; 10-11-2007 at 06:19 PM.
வேலைக்கு சேர்ந்துட்டீங்க போல நண்பனே......கொடுங்க நிறைய
Last edited by அமரன்; 10-11-2007 at 06:19 PM.
நல்ல கவிதைகள் நண்பன்.
முதல் கவிதையும் அண்மை பயணமும்...
மனம் கனக்கிறது..
Last edited by அமரன்; 10-11-2007 at 06:19 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நன்றி முத்து, இளசு, பப்பி.
எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் செட்டிலாகி விடும். பின்னர் நிறைய எழுத முடியும் என்றே நினைக்கிறேன்....
Last edited by அமரன்; 10-11-2007 at 06:20 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
அருமையான கவிதைகள் நண்பன்!
நலமா?தொடர்ந்து கொடுங்கள்!
நன்றி!எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!
Last edited by அமரன்; 10-11-2007 at 06:20 PM.
உங்களை மாதிரி அன்பு மிக்க நண்பர்களின் பிரார்த்தனை இருக்கும் பொழுது, அனைத்தும் நலமாகவே இருக்கும், நிலா..... நன்றிகள்..........
Last edited by அமரன்; 10-11-2007 at 06:20 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
வானம்
காலியாகக் கிடக்கிறது
சிறகுகள் விரிக்கும்
பறவைகள்
பறக்காததினால்
அப்படிட் தோன்றலாம்....
முதுகில் அடிக்கும்
அனலின் வீச்சில்
ஓடிவிட்ட மேகங்கள்
தந்த வெறுமையால் இருக்கலாம்....
முடிவில்லாது நீளும்
நாட்களைக் கொண்ட
பூமத்திய ரேகை
நாடானாதாலும் இருக்கலாம்
இயற்கையே அஞ்சி
ஒளிந்து கொண்ட நாளில்
வானம் காலியாகக் கிடக்கிறது -
கீழே நிகழும்
மனிதர்களின் வாழ்க்கையைப்
பாத்துக் கொண்டு.....
Last edited by அமரன்; 10-11-2007 at 06:21 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
உன் தேவைகளை
உணர்ந்து கொள்ள
எந்த ஒரு முயற்சியும்
செய்ததில்லை நான்...
உன்னைப் பாராட்டவும்
முயற்சிகள் ஏதும்
செய்ததில்லை நான்.....
உன் தேவையை
என்றாவது
உணர்ந்திருப்பேன் என்றால்
அது, எனது
சில நிமிட நேர
இயற்கைட் தேவைகளின்
உந்துதலினால் மட்டுமே
இருந்திருக்கக் கூடும்.....
உன் தேவையை
உணராத நான்
உனக்கு
நன்றி சொல்ல மட்டும்
எப்படி முயற்சித்திருக்கக் கூடும்.....?
எல்லா தேவைகளையும்
காசு கொடுத்தே
வாங்க வேண்டும் என்ற
இன்றைய வாழ்வின்
நிதர்சனத்தில்
மனம் முழுக்க நிரம்பி வழிகிறது -
உனக்கான,
உன்னிடம் சொல்லப்படாத நன்றிகள்......
Last edited by அமரன்; 10-11-2007 at 06:21 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
சில நன்றிகள் உய்த்துணர மட்டுமே
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமிலை நண்பன்..
பாராட்டுகள் உணர்ந்து வடித்த கவிதைகளுக்கு
Last edited by அமரன்; 10-11-2007 at 06:21 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks