விரல் நுனியில் தொட்டு
விழிகளில் இட்டு
கண்ணாடியில்
முகம் பார்க்க
பிரகாசம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
சரியான அளவுகளில் நிறங்களில்
அனைத்தும் ஆச்சர்யம்

அவ்வப்போது திறளும் கண்ணீர்
மட்டுமே என் எதிரி இப்போது
வழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய்
புகுந்திருந்த அந்த மென் வில்லை