Results 1 to 3 of 3

Thread: ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0

    ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

    03. கடவுள் வாழ்த்து
    ஆன்மீகச் செய்திக் கவிதைகள்


    0002. திருவையாற்று ஐங்கரன்
    (நேரிசை வெண்பா)
    (பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)


    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.

    ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
    மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
    காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
    ஊணற்றுப் போகும் உறவு.

    [ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]

    15/04/2017

    *****

    0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
    (கலிவிருத்தம்)
    (அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)


    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்

    விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
    விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
    முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
    விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.

    15/04/2017

    *****

    0004. வேளூர் வைத்தியர்
    (கலித்துறை)
    (சிவன்: வேளூர் வைத்தியநாதர்)


    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்

    வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
    செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
    தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
    மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1

    வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
    தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
    மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
    சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2

    15/04/2017

    *****

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    0005. தோணியப்பர் காப்பு
    (கலிவிருத்தம்)
    (சிவன்: சீர்காழி தோணியப்பர்)


    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு

    புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
    தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
    பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
    அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1

    [தனு = உடல்]

    தோணி யப்பர் துணையென் றானால்
    ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
    ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
    பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2

    [ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
    15/04/2017

    *****

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
    (கலிவிருத்தம்)
    (சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)


    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்

    நோய்-களை யோகம் நோவிலா நலமிக
    வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
    ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
    தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.

    [வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
    அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]

    (தரவு கொச்சகக் கலிப்பா)
    கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
    இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
    அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
    பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.

    15/04/2017

    *****

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •