இனக்கவர்ச்சி கவசமில்லை…
வசமாகிப் போனாய்…..
உடல் மொழி ஈர்ப்பில்லை…
ஈரமழையில் நனைத்தாய்…
விழிகள் உரையாடியதில்லை…
வழியெல்லாம் தேடினாய்…
விரல்கள் விளையாடியதில்லை
வழிகாட்டியாய் நின்றாய்...
உதடுகள் உறவாடியதில்லை…
உன்னையே எனதாக்கினாய்..….
என்னில்
எவையுன்னை இழுத்ததென பிடிபடும் முன்னே…
யாதுமாகி நிற்கிறாய் என் பின்னே..
உயிரோடு கலந்துவிட்டவளே….நான்
உனக்குமாய் சுவாசிக்கவில்லை...
உன்னையே சுவாசிக்கிறேன் …
இன்சொல் சொல்லாவிடினும்
செல்லமேயென சிலாகிக்கிறாய்..…
தோள்தராவிடினும்
ஆல் சாய்ந்து ஆசுவாசமாகிறாய்…
கரம்பற்றாவிடினும் கண்ணடித்து ரசிக்கிறாய்..
என்னவளே… யெனக்காக யெல்லாமுமாகியவளே…
என்செய்யப் போகிறேன் உனக்கென.….உள்ளமெங்கும்
இன்பவதமென் வாழ்வில் உன் வரவு….
Bookmarks