Results 1 to 5 of 5

Thread: யாதுமானவளே...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    யாதுமானவளே...

    இனக்கவர்ச்சி கவசமில்லை…
    வசமாகிப் போனாய்…..
    உடல் மொழி ஈர்ப்பில்லை…
    ஈரமழையில் நனைத்தாய்…
    விழிகள் உரையாடியதில்லை…
    வழியெல்லாம் தேடினாய்…
    விரல்கள் விளையாடியதில்லை
    வழிகாட்டியாய் நின்றாய்...
    உதடுகள் உறவாடியதில்லை…
    உன்னையே எனதாக்கினாய்..….
    என்னில்
    எவையுன்னை இழுத்ததென பிடிபடும் முன்னே…
    யாதுமாகி நிற்கிறாய் என் பின்னே..
    உயிரோடு கலந்துவிட்டவளே….நான்
    உனக்குமாய் சுவாசிக்கவில்லை...
    உன்னையே சுவாசிக்கிறேன் …

    இன்சொல் சொல்லாவிடினும்
    செல்லமேயென சிலாகிக்கிறாய்..…
    தோள்தராவிடினும்
    ஆல் சாய்ந்து ஆசுவாசமாகிறாய்…
    கரம்பற்றாவிடினும் கண்ணடித்து ரசிக்கிறாய்..
    என்னவளே… யெனக்காக யெல்லாமுமாகியவளே…
    என்செய்யப் போகிறேன் உனக்கென.….உள்ளமெங்கும்
    இன்பவதமென் வாழ்வில் உன் வரவு….
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    செம...
    நல்லதொரு ஆரம்பம். !!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    எல்லாம் அவளான பின்
    எது இங்கே
    ஏங்குகிறது?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    யாதுமாகி உங்கள் சுவாசமான பூக்களின் பாசம் பல்கிப் பெருகட்டும் பூ அண்ணலே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    Quote Originally Posted by poo View Post
    விழிகள் உரையாடியதில்லை…
    வழியெல்லாம் தேடினாய்…
    கண் முன்னே நீ இல்லை - ஆனால்
    காட்சி எல்லாம் நீயாய்!

    Quote Originally Posted by poo View Post
    உதடுகள் உறவாடியதில்லை…
    உன்னையே எனதாக்கினாய்..….
    அமைதியாய் அருகில் நீ !
    அனை உடைத்த ஆறாய் நான்!



    Quote Originally Posted by poo View Post
    இன்சொல் சொல்லாவிடினும்
    செல்லமேயென சிலாகிக்கிறாய்..…
    உன் சின்ன சினுங்கல்!
    செவி சிலிர்க்கும் சிம்பொனியாய் எனக்கு!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •