மறை உண்டு அவனியிலின்று
அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
ஆண்டவன் அவதாரம் என்று!
மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
மகா பாரதத்தில் அன்று !
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
மாயன் தங்கையால் : நன்று !
அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
அன்புடன் சொல்வீர் !
........
கண்ணன் சொன்னது கீதையில் :
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்| தர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||
(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)
Bookmarks