காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !
பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு :பர பரவென்றே புறப்படு
பக்கத்து வீட்டு பையன் கூட பறந்து விட்டான்
போகத்தான் வேண்டும் வேண்டாம் வீண் வாதம்
பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா !பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
.
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !
(படித்த ஜோக்கின் தழுவல்)
Bookmarks