43.
தேங்கிய நீர் குறையும்
திணறும் மீன்கள் சுற்றிவரும்
சூரியன் தலைமேல் வர.
44.
அம்புலி உள்ளே முயல்?
மாலை மறையும் சூரியனுள்
மாடப் புறா சுற்றும்
*****
43.
தேங்கிய நீர் குறையும்
திணறும் மீன்கள் சுற்றிவரும்
சூரியன் தலைமேல் வர.
44.
அம்புலி உள்ளே முயல்?
மாலை மறையும் சூரியனுள்
மாடப் புறா சுற்றும்
*****
28/11/2015
ஹைக்கூ, சென்ரியு வேறுபாடு
இப்படி எழுதினால் இது ஹைக்கூ அருகில்:
51.
கூர்ந்து காணும் முகம்
குழந்தை நட்பில் இன்னொரு உயிர்
என்-நத்தை இது இனி.
இப்படி யெல்லாம் எழுதினால் இவை நிச்சயம் சென்ரியு:
தன்னை அறிந்திடவே
நத்தை நோக்கும் குழந்தை முகம்
ஐம்புலன் கூட்டுக்குள்!
அப்பா போல் நத்தை
எத்தனை ஸ்லோ! எவ்வளவு கூல்!
அம்மாவும் ஆமை.
--ரமணி, 28/11/2015
*****
27/11/2015
45.
புகையாய் ஓடும் முகில்
பௌர்ணமி நிலவு மூழ்கி எழும்
குழந்தை பார்க்கத் தாய்
46.
அந்தி நேர வான்
மரக்கிளைப் பறவைகள் மௌனத்தில்
அடங்காத புறாக்கள்
*****
47.
எலிக்குறி தொடர்ந்திடவே
கணினித் திரைமேல் சிறுபூச்சி
முகமலர்ச் சிறுவன் கை.
[எலிக்குறி = mouse pointer]
48.
குஞ்சுக் கால் நடக்கும்
கட்டெறும்பு வரிசை பற்றி
தும்பி வட்டமிடும்
*****
49.
முள்மரத்தில் கொக்குகள்
கறுப்பாய் ஒரு பறவை
பாடிக் களைத்த குயில்
50.
மழைநீர்த் தேக்கத்தில்
தலைகீழ் இயற்கை மனம் கவரும்
மனிதர் வழக்கம் போல்.
*****
52.
கண்ணாடி வில்லை
வெய்யில் குவிக்கும் இரு சிறுவர்--
சிறுமியின் கவிழ்த்த கை
53.
சூரியன் தலைக்கு மேல்
வாய்நீர் விசிறும் சிறுவர்கள்--
காலடியில் வானவில்
*****
54.
திருச்சி நெடுஞ்சாலை
மையிருள். பேருந்து பழுது--
மின்மினிப் புதர் விளக்கு!
09/12/2015
55.
தென்னையின் காய்ந்த மட்டை
இற்று நிலம் விழும் ஓசை--
கோழி கூரை தொடும்!
56.
ஆந்தைக்கண் விரித்து
ஆகாயம் நோக்கும் பொழுது--
ஒரே ஒரு நட்சத்திரம்!
*****
11/12/2015
57.
தொங்கும் சிறு கம்பி
அலகால் முயலும் காக்கை--
நுனிக்காலில் குழந்தை!
58.
கண்ணுடன் கண் நோக்கக்
காக்கையைப் பார்த்தாள் என் மனைவி--
மாடியில் போட்ட வடாம்!
*****
59.
வயல்சேற்றில் நகர்வது
வெள்ளைத் தாமரைப் பூக்களோ?
வாத்துகள் அணிவகுப்பு!
60.
ஜன்னல் கம்பியில் கண்--
வான்நின்று ஒரு நட்சத்திரம்
குழந்தை கண்ணில் விழும்!
*****
16/12/2015
61.
மின்விசிறி அருகே
கூரையில் நீரலைகள் ததும்பும்--
பல்லியும் பச்சோந்தி!
62.
அணிலை விரட்ட
முருங்கை மரத்தை ஆட்டும் குழந்தை--
தரையில் பூக்கோலம்!
*****
22/12/2015
63.
மரக்கிளைப் பறவைகள் சளசள
தூளியில் குழந்தை கண்பார்க்கும்--
தாயவள் கண்மூட!
64.
நாய் காலைத் தூக்கும்
கருவோலைப் பந்தல் பிரிப்பு--
பசுவுக்கு உணவு!
*****
65.
இருளில் சதுப்பு நிலம்
குழந்தைக் குரல்கள் காதில் விழும்--
கானாங் கோழிகள் குழு!
66.
சிறகடித்துக் குளிக்கும்
குருவித் திரள் எங்கே போயின?
நுண்கதிர் தரும் அழிவு!
*****
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks