தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன்
தண்ணீரில் தவித்தவனை அவன்
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்
மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்டவன் உதவி வியர்த்தமே
மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மாட்டியே தொங்கினான்
அரண்டான் என் மகன் ! ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? பொய்தானே !
அன்பாய் உலர்த்தினேனே ஈரம் காய !
அவனை தூக்கில் மாட்டியதே நான்தானே !
Bookmarks