உன்மத்தமாய் என் மகன் ஆடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தினம் தேடுகிறான்
உரக்கவே எவருடனோ பாடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர் !
கண்மணியின் கவலை இது - கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை - அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே- இதன்
காரணம் என்ன டாக்டர் ?
கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை !
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை !
கூட்டி வா உன் மகனை சரியாகும்
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம் !
அதெப்படி சாத்தியம் டாக்டர் ?
அவளுக்குத்தான் மகனே இல்லையே !
Bookmarks