Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 25 to 36 of 69

Thread: அனுபவத் துளிகள்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    25. அசலும் நகலும்
    (கலித்துறை: எல்லாம் காய்ச்சீர்)

    ’அறம்செயவி ரும்பென்றும் ஆறுவது சினமென்றும் அப்பாதன்
    முறம்போலும் எழுத்துகளில் முத்தாக ஏடெழுதி முன்வைக்கத்
    திறமையுடன் நான்முயன்றே தவறுபல செய்ததெலாம் திருத்தியவர்
    பொறுமையுடன் போதித்த பொழுதெல்லாம் என்மனதில் பொக்கிஷமே!

    --ரமணி, 25/10/2015

    *****

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    26. மின்ரயில் மரவட்டை!
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    ஒளிரும் மரவட்டை ஊறுவது போல
    உளமகிழ் தூரத்தில் ஓசையின்றி மின்ரயில்!
    மையிருளில் என்கண் மகிழுந்தின் சன்னலில்
    பொய்யாய்க் கரைக்கும் பொழுது.

    [மகிழுந்து = கார் ]

    --ரமணி, 25/10/2015

    *****

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    27. கானலின் தும்பு!
    (அளவியல் நேரிசை வெண்பா)

    சுட்டெரிக்கும் வெய்யிலில் சோர்ந்த பயணத்தில்
    கட்டவி ழும்மரங்கள் கார்நிழல் - வெட்டியே
    சாலை விரைந்துசெலும் சக்கரம் தூரத்தில்
    தூலமாய்க் கானல்நீர்த் தும்பு.

    --ரமணி, 26/10/2015

    *****

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    28. முகிலும் நிழலும்
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    முகிலொன்று சூரியனை மூடிடக் கண்டேன்
    முகிலின் நிழலோட முன்னோடும் சாலை
    நிழலும் வெயிலுமாய் நின்றுசெலும் ஆட்டம்
    விழலே விழுமத்தின் வித்து.

    --ரமணி, 27/10/2015

    *****

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    வாசிக்க வாசிக்க பிரமிக்க வைக்கிறது உங்கள் ஆற்றல், வணங்குகிறேன் ரமணி !

  6. Likes ரமணி liked this post
  7. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    29. வாயால் ஒரு வானவில்!
    (அறுசீர் விருத்தம்: தேமா மா காய் மா மா காய்)

    வாயில் கொஞ்சம் நீர்வைத்தே
    . வாயை நெகிழிப் பந்தாக்கிப்
    பாயும் காற்றால் கொப்பளிக்கப்
    . படலம் போல நீர்த்துளிகள்
    மாயக் கதிரின் பிரிகையென
    . வான வில்லாய் விழநாங்கள்
    சேயாய்க் கண்டு மகிழ்ந்ததெலாம்
    . சிந்தை நிற்கும் விலகாதே!

    [நெகிழிப் பந்து = பலூன்]

    --ரமணி, 28/10/2015

    *****

  8. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    30. கல்லுரிக்கும் வானவில்!
    (அறுசீர் விருத்தம்: கூவிளம் மா காய் விளம் மா காய்)

    கல்லணை மதகின் நெடுஞ்சுவர்கள்
    . காவிரி அலைகள் மோதுவதைச்
    சல்லடை யாகக் காற்றினிலே
    . சலித்திடப் பிரியும் நீர்த்துளிவான்
    வில்லெனக் காற்றில் சிதறுவதை
    . விழிகளில் மலைத்தே ரசித்தகணம்
    சொல்லெது மில்லாச் சித்திரமாய்ச்
    . செய்திட வந்தேன் சொற்களிலே!

    --ரமணி, 28/10/2015

    *****

  9. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    31. சிறுமுகில் குறும்பு!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
    சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
    காது மடலில் கால்வைத் திறங்கும்
    சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
    வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
    கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1

    [மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]

    கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
    தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
    நீரது வற்றி நீளும் தேயும்
    சூரிய வொளியில் தூய்மை யாகும்
    மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
    சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2

    சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
    என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
    ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
    காடும் வயலும் காண்பது தகுமோ?
    சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
    பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3

    --ரமணி, 31/10/2015

    *****

  10. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    32. மழைக்கால மாலை
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
    தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
    தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
    மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1

    தரையில் சுவரில் சலனம் இன்றிக்
    கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
    நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
    வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2

    தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
    ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
    வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
    கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3

    [கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]

    விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
    தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
    சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
    எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4

    தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
    ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
    நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
    தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5

    --ரமணி, 01/11/2015

    *****

  11. #34
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    தமிழும் நீங்களும் சேர்ந்து தரும் விருந்து. வாயால் வானவில்... மழைக்காலக் காட்சிகள் அத்தனையும் ஓவியம்போல் அசத்தல் ரமணி.

  12. Likes ரமணி liked this post
  13. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பின்னூட்டம் பலே! மிக்க நன்றி, ரவிசேகர்.

    Quote Originally Posted by ravisekar View Post
    தமிழும் நீங்களும் சேர்ந்து தரும் விருந்து. வாயால் வானவில்... மழைக்காலக் காட்சிகள் அத்தனையும் ஓவியம்போல் அசத்தல் ரமணி.

  14. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    33. பசுவின் பாய்ச்சல்!
    (பஃறொடை வெண்பா)

    கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
    வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
    பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
    இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
    தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
    நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
    வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
    நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
    கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
    துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.

    --ரமணி, 02/11/2015

    *****

  15. Likes ravisekar liked this post
Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •