25. அசலும் நகலும்
(கலித்துறை: எல்லாம் காய்ச்சீர்)

’அறம்செயவி ரும்பென்றும் ஆறுவது சினமென்றும் அப்பாதன்
முறம்போலும் எழுத்துகளில் முத்தாக ஏடெழுதி முன்வைக்கத்
திறமையுடன் நான்முயன்றே தவறுபல செய்ததெலாம் திருத்தியவர்
பொறுமையுடன் போதித்த பொழுதெல்லாம் என்மனதில் பொக்கிஷமே!

--ரமணி, 25/10/2015

*****