Page 4 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 37 to 48 of 69

Thread: அனுபவத் துளிகள்

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    34. கண்முன்னே ஓர் கொலை!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
    பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
    காலை நேரம் கட்டெறும் பொன்றென்
    மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
    கீழே விழுந்த கேடோ அல்லது
    வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
    வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
    குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!

    --ரமணி, 03/11/2015

    *****

  2. #38
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    அனுபவங்கள்
    அத்தனையும்
    அசலான
    அமுதப்பாக்களாய்..

    நாங்கள் பருகும் ஈக்களாய்.

    ரமணிக்குப் பாராட்டுக்கள்.

  3. Likes ரமணி liked this post
  4. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    45. சிறகைக் களைந்தால் சிறை?!
    (அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)

    பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
    இரணியன் நெஞ்சென இற்றது பூமி
    தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
    மனதை அரித்த மழை. ... 1

    தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
    வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
    கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
    மனத்தை அரித்த மழை. ... 2

    வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
    உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
    உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
    எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3

    அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
    இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
    அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
    குற்றுயி ரான குலை. ... 4

    கடமை குறையக் கவலை குறைய
    உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
    குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
    விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5

    மூன்று தினமாக முக்கி முனகியே
    ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
    விடியலின் கீற்றுவர விட்டது மாரி
    ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6

    இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
    துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
    சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
    சிறகைக் களைந்தால் சிறை. ... 7

    --ரமணி, 17/11/2015

    *****

  5. #40
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    46. சாலையில் மீன்கள்!
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
    சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
    ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
    மூரி இழந்த முடை. ... 1

    [மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]

    சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
    ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
    பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
    சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2

    இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
    வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
    தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
    விடுவலை கொண்ட விழி. ... 3

    மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
    வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
    நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
    நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4

    உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
    அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
    கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
    உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5

    --ரமணி, 17/11/2015

    *****

  6. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மிக்க நன்றி, ரவிசேகர்.
    ரமணி


    Quote Originally Posted by ravisekar View Post
    அனுபவங்கள்
    அத்தனையும்
    அசலான
    அமுதப்பாக்களாய்..

    நாங்கள் பருகும் ஈக்களாய்.

    ரமணிக்குப் பாராட்டுக்கள்.

  7. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    35. காலம் கடந்த ரயில்!
    (நேரிசை ஆசிரியப்பா)

    ’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
    கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
    மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
    ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
    காலம் கடந்தும் ரயிலின்
    ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.

    அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
    சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
    அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
    அணுகில் ஆடும் அசைபடம் என்றே
    வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
    வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?

    --ரமணி, 04/11/2015

    *****

  8. #43
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    36. ஆறும் ஆஞ்சநேயரும்!
    (நேரிசை ஆசிரியப்பா)

    ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
    சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
    அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
    சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
    நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
    சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!

    அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
    அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
    சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
    கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
    கள்ளமிலா நாட்கள் கனவாக
    உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!

    --ரமணி, 05/11/2015

    *****

  9. #44
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    37. கற்சட்டி மகிமை!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
    சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
    உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
    கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
    சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
    அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
    பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
    உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
    பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
    சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!

    கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
    பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
    மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
    மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
    தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
    உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
    வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
    ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
    கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
    வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!

    --ரமணி, 07/11/2015

    *****

  10. #45
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    38. ஆரோவோர் பையன்!
    (அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)

    ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
    . அடிவாங்கப் போறான்!
    தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
    . தளைமீற இரைவேன்
    பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
    . பேசியைக்கை விடுக்கும்!
    வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
    . மனதுக்குள் மகிழ்வே!

    ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
    . ஆசையிலே பிள்ளை
    பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
    . பிடித்ததெலாம் பார்க்கத்
    சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
    . தொலைக்காட்சி யடக்கி
    ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
    . அடிவாங்க மாட்டான்!

    --ரமணி, 07/11/2015

    *****

  11. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    39. மழையின் மற்றொரு பக்கம்
    (பஃறொடை வெண்பா)

    கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்! முழங்கால்
    அணைத்தே சுழலுடன் ஆறென நீரோடும்
    மின்வெட்டின் காவல் வினைசெய்ய ஏதுமில்லை
    சன்னமாய்ச் சூழ்ந்தே தளைத்த இருளில்
    நுழைவதற் கேதுமின்றி நொந்து தவித்தே
    மழைப்பொழிவில் மூழ்கும் மனம்.

    --ரமணி, 10/11/2015

    *****

  12. #47
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    40. வாலறி(ரி)வர் தந்தை!
    (பஃறொடை வெண்பா)

    குழந்தை யிரண்டு குறும்போ பலவே
    வழிவழி யாய்வரும் வாடகை வீட்டறையில்
    தொங்கியொளிர் மின்குமிழ்த் தொப்பி இடுக்கினில்
    டிங்கென்று விக்ஸ்சிமிழ் டிங்கி யடிக்கவே
    தாழ்கரத்தால் மேலெறிந்து சப்தம் ரசிக்கவே
    மூழ்போட்டி தன்னிலே முட்டைக் குமிழ்தெறிக்க
    ஓடிக் குளியலறைப் பக்கம் ஒளியவே
    நாடிவந்த அன்னை நலம்விசா ரித்தபின்
    மாலையவள் தந்தையிடம் வக்கணையாய்ச் சொல்லப்போம்
    ஓலை விசிறி உடைந்து. ... 1

    [மின்குமிழ்த் தொப்பி = light bulb dome;
    டிங்கி = குட்டிக்கரணம்]

    அதன்பின்னர் தந்தை அணைப்பில் குளித்தோம்
    பதிந்த தழும்பைப் பதமாய்த் தடவியவர்
    சீனிக்கா ராசேவில் சிற்சில தந்திடத்
    தீனியில் உள்ளம் திளைத்தே இருவரும்மண்
    ணெண்ணெய் விளக்கினில் ஏறும் நிழல்பார்த்தே
    உண்ணும் உணவிலே உள்ளம் களித்தோம்
    கனிவுடன் அன்னை கதைசொலக் கேட்டே
    தனிமை தழுவினோம் தாழ்விழித் தூக்கத்தில்!
    போன பொழுதைப் புதுப்பிக்கும் உள்ளத்தில்
    வானவில் வண்ண வளம். ... 2

    --ரமணி, 10/11/2015

    *****

  13. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    41. படிகளில் உருண்டுருண்டு...
    (குறள் வெண்செந்துறை)

    மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
    வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
    சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
    முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
    வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
    விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1

    மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
    சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
    குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
    அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
    அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
    பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2

    கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
    இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
    பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
    உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
    என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
    முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3

    --ரமணி, 11/11/2015

    *****

Page 4 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •