முதலில் உனைப்பார்த்த நேரம்
மறக்க முடியாத ராகம்
இதயத்தை இறகுகள் கொண்டு
இதமாக வருடியே போகும்
பனுவல்கள் பாடிக்கழித்த நேரம்
இனியென்று வருமந்த காலம்
நினைந்து உருகுதடி நெஞ்சம்
நினைவுகளுக் காவிங்கு பஞ்சம்
வசந்தங்கள் மீண்டும் பிறக்கும்
வாசல்கள் மீண்டும் திறக்கும்
இசைக்க மறந்தபல பாடல்
இசைத்திட இதழ்கள் துடிக்கும்
கனவுகளை சேகரித்து வைப்போம்
காதல் சிறகுகளைத் தைப்போம்
கனியும் நமக்குமொரு காலம்
கட்டாயம் அன்று ஜெயிப்போம்
வீயார்
Bookmarks