கடும் வெயில் காயும் மரத்தடி
சுடும் வேளை சோர்ந்த நேரமடி
திடும் என்றே இருவர் வந்தனர்
எடும் அந்த அரிவாள் என்றனர்
கொடும் அரக்கர் அவர் கண்டு என்
குலை நடுங்கியது தொலைந்தேன்
கூட்டத்தில் மறைந்த என்னை
குறிப்பாய் ஒருவர் கண்டு விட்டார்
உன்னைத்தான் தேடினேன் என்றே
ஓங்கினார் கை வீசினார் – அன்பே !
உதிர்ந்தேன் நான் நொடியில்
சரிந்தேன் உன் மடியில்
.... யாருடைய வாக்கு மூலம் ?
Bookmarks