என் காதல் கவிதைகளை இங்கே பதிக்கலாம் என நினைக்கிறன் ஆதரவு தர வேண்டுகிறேன்
என் காதல் கவிதைகளை இங்கே பதிக்கலாம் என நினைக்கிறன் ஆதரவு தர வேண்டுகிறேன்
மனதில் பதிந்த உன்னை
எப்படி அழிப்பேன்,.......
உயிரைக் கூட தூக்கி
எறிவேன்,
உன்னை எப்படி தூக்கி
எறிவேன்........
என் அன்பைக் கேட்டாய்,
என் பாசம் கேட்டாய்,
கடைசியில்,
என் உயிரையும்
கேட்கிறாயே,
காதல் தோல்வி எனும் பெயரில்........
நான் என்ன செய்ய......
அன்று காதல் மயமான
கற்பனை உலகத்தில்
சஞ்சரித்து கொண்டிருந்தேன்
உன்னை காதலித்த போது....!!
ஆனால் இன்று ???
புத்தரைப் போல மௌன
தவம் கொள்கிறேன் நீ
பிரிந்து சென்ற இன்று ....!!!
நல்ல கவிதைகள். இன்னும் தொடருங்கள். பாராட்டுக்கள்.
நிலா பெண்ணே...!!
நீ என் கண்களில் விழுந்து
தொலைந்ததால் தானோ என்னவோ
தினமும் என்னை அழ வைக்கிறாய்....!!!
சூரியனை மேகம் தினமும்
தழுவி செல்வதைப் போல தான்
நீயும் என்னை தழுவி சென்றாய் அப்போது...!!!
காதல் தோல்வி கவிதைகளாய் வந்து
இதயத்தை உடைக்கிறாய் இப்போது...!!!
என் கண்கள் சொரியும் கண்ணீருக்கும்
கூட தெரிந்த என் காதல் உனக்கு
தெரியாமல் போனது தான் விதியின் சூட்சுமம்...!!!
தூண்டிலில் சிக்கி உயிருக்குப் போராடும்
மீனைப் போல நானும் காற்றில் அசையும்
உந்தன் தாவணியில் சிக்கித் தவிக்கிறேன்...!!!
பாறை மேல் விழுந்து சிதறிப் போகும்
மழைத் துளி போல என்னுள் விழுந்து
சிதறிப் போனாயே பெண்ணே...!!!
என் உயிர் கூட நீராவியாய் போகிறதே
அன்பே... உந்தன் கொலுசொலி எந்தன்
செவியில் சரசமீட்டும் போது....!!!
இப்போதும் நீ என்னை நினைகிறாயா
என்று தெரியாமல் உன்னுள் புதையுண்டு
கிடக்கிறேனே ... தீவின் நடுவில் தஞ்சம்
அடைந்ததாகவே நினைக்கிறேன் கண்ணே...!!!
உனக்காக நான் எழுதி கசக்கி எறியும்
காகிதங்கள் கூட எனக்காக கண்ணீர் சிந்தும்....
ஆனால் நீயோ என் கண்ணீரில் விழுந்து
எழுந்து நீந்தி செல்கிறாயே அழகே....
அது எப்படி.... ???
பாறை மேல் விழுந்து சிதறிப் போகும்
மழைத் துளி போல என்னுள் விழுந்து
சிதறிப் போனாயே பெண்ணே...!!!
அழகு, பாராட்டுக்கள்.
என்னைத் தாங்கும்
என் காலணிக்கு
ஒரே கோவம் ....!!
ஏன் இவ்வளவு சுமை
என்று????
அதற்கு எங்கே தெரியப்
போகிறது உன்னையும்
சேர்த்து என் இதயம்
சுமப்பதை ... !!
அருமை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks