வருமானம் பெருக்கவே
சுருக்கான வழி
வெளிநாட்டு நிறுவனம்
வெட்டிய குழி
விழுந்தது இந்தியன் தானே !
எழுவானா விழித்து இனியேனும் ?
வருமானம் பெருக்கவே
சுருக்கான வழி
வெளிநாட்டு நிறுவனம்
வெட்டிய குழி
விழுந்தது இந்தியன் தானே !
எழுவானா விழித்து இனியேனும் ?
நூடுல்ஸாம் மேகியால் தீங்கின்றி வேறில்லை
நாடுவோர் நாடட்டும் விட்டிடுக - பாடுபட்டு
வீட்டினிலே செய்யும் இடியாப்பம் ஒன்றேதான்
நாட்டும் நலத்தை நமக்கு .
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அதுவும் சரிதான். ஜெகதீசன் !
இடியாப்பம் இட்லி தோசை வடகறி
என ஏராளமாய் கிடக்கையில்
ஏன் நமக்கு இந்த நூடுல்ஸ் வெறி
என்ன குறை நம் வீட்டினில்
யார் காரணம் நம் நாட்டினில்
தரங்கெட்ட அரசியல்வாதியா ?
துணை நிற்கும் அதிகாரியா?
தன்மானம் விற்ற வியாபாரியா?
தறி கெட்ட விளம்பரமா ?
ஏற்றமற்ற போட்டி கொண்டு
ஏமாற்றியவர் பலர் உண்டு
ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று!
ஏதோ ! இன்றாவது விழித்தோமே !
அருமையான கவிதைகள். முரளி, எம் ஜெகதீசன் இருவருக்கும் பாராட்டுக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks