நீ
வருவதறிந்ததுமே...
வான்மேகம் வந்திறங்கிச்
சுட்டெரிக்கும் சூரியனைக்
கடலுக்குள் எறிந்துவிட்டுச்
சந்திரனைத் தந்திரமாய்க்
கூட்டிக்கொண்டு வருவதற்குள்...
நின் முகம் கண்டதுமே
வெண்ணிலவும் வந்ததென
மலர்ந்துவிட்ட மலர்கள் வாசம்...
வானமெங்கும் விரவிடவே,
வந்துதித்த வெண்ணிலவோ..
நடந்ததேதும் புரியாமல்
மண்டை பிய்க்க
முழுவட்ட நிலவதுமே
அரைவட்டமாகியதே..!
Bookmarks