இவன் :
அது மேல எனக்கு ஒரு இது
அடக்க முடியாம கட்டிகிட்டேன்
ஆசையே துன்பத்திற்கு காரணமாம்
அது பொய்
அவளில்லாமல் நானில்லை
அதுவே மெய்
இவன் மவன் :
மோதியது விதி - கண்டோம்
மனதில் காதல் கொண்டோம்
மூணு வார சந்தோசம்
முட்ட முட்ட அனுபவித்தோம்
மால் என்ன பீச் என்ன - பின்
முடிவெடுத்தோம்
முடிந்தது திருமணம்
முப்பதே நாள் மோகம் -பின்
முறிந்தது இருமனம்
மகிழ்ச்சி எங்கே! காணோம் !
மீண்டும் தேடுகிறோம் தனித் தனியே !
மெய் இதுவே !
**
Bookmarks