Results 1 to 2 of 2

Thread: வாழ்க்கை பயங்கள் (மறு பதிப்பு)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Sep 2003
    Location
    சென்னை (இந்தியா)
    Posts
    103
    Post Thanks / Like
    iCash Credits
    25,993
    Downloads
    3
    Uploads
    1

    வாழ்க்கை பயங்கள் (மறு பதிப்பு)

    வாழ்க்கை பயங்கள்

    வாழ்க்கையைக் கண்டு
    பயந்தேன்!!
    அதன்
    வசந்தத்தை அனுபவிக்காத
    வரை!!

    அன்பைக் கண்டு
    பயந்தேன்!!
    அது என்
    இதயத்தில் இருள்
    போன்ற கருமையை
    நீக்கி,
    நிகரில்லா
    வெளிச்சத்தை வீசும் வரை!!

    வெறுப்பைக் கண்டு
    பயந்தேன்!!
    அது
    அறியாமை என்று
    அறியும் வரை!!

    ஏளனங்களைக் கண்டு
    பயந்தேன்!!
    எனக்குள்
    சிரிக்கத் தெரியாதவரை!!

    தனிமையைக் கண்டு
    பயந்தேன்!
    நான் தனியாக
    இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

    தோல்விகளை கண்டு
    பயந்தேன்!!
    தோல்வியே
    வெற்றிக்கு அறிகுறி என்று
    உணரும் வரை!!


    வெற்றிகளை கண்டு
    பயந்தேன்!! வெற்றியே
    வாழ்க்கையின் சந்தோஷம்
    என்று அறியும் வரை!!

    மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
    பயந்தேன்!! அவர்களுக்கும்
    என்னைப் பற்றிய கருத்துக்கள்
    இருக்கும் என்று உணரும் வரை!!

    ஒதுக்கப்படுவதைக் கண்டு
    பயந்தேன்!! எனக்குள்
    தன்நம்பிக்கை வரும் வரை!!

    வலிகளை கண்டு
    பயந்தேன்!! அது
    வளர்ச்சிக்கு தேவை
    என்று அறியும் வரை!!

    உண்மையைக் கண்டு
    பயந்தேன்!! பொய்மையின்
    முகங்களை பார்க்கும் வரை!!

    வயதானதை அறிந்து
    பயந்தேன்!! வாழ்க்கையில்
    பண்பட்டு விட்டேன் என்று
    உணரும் வரை!!

    நடந்ததை நினைத்து
    பயந்தேன்!! அது இனி
    நடக்காது என்று
    நம்பும் வரை!!


    நடக்கப் போவதை
    நினைத்து பயந்தேன்!!
    நடந்தது எல்லாம்
    நன்றாகவே நடந்தது,
    நடக்கப் போவதெல்லாம்
    நன்றாகவே நடக்கும்
    என்று உணரும் வரை!!!

    மரணத்தைக் கண்டு
    பயந்தேன்!! அது முடிவல்ல
    புதிய ஆரம்பத்தின் தொடக்கமே
    என்று உணரும் வரை!!!
    -அன்புடன் பாலா-
    முடிந்த பொழுது நல்லதையே செய்
    முடியாத பொழுது நல்லதையே நினை

  2. Likes ஆதவா liked this post
  3. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    //மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
    பயந்தேன்!! அவர்களுக்கும்
    என்னைப் பற்றிய கருத்துக்கள்
    இருக்கும் என்று உணரும் வரை!!

    ஒதுக்கப்படுவதைக் கண்டு
    பயந்தேன்!! எனக்குள்
    தன்நம்பிக்கை வரும் வரை!!

    வலிகளை கண்டு
    பயந்தேன்!! அது
    வளர்ச்சிக்கு தேவை
    என்று அறியும் வரை!!

    உண்மையைக் கண்டு
    பயந்தேன்!! பொய்மையின்
    முகங்களை பார்க்கும் வரை!!//

    சிறப்பான வரிகள், வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •